FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 28, 2011, 05:48:37 PM
-
அன்று இவ்வுலகில் உனக்கு இறுதி நாள் !
அதுதான் உன் மரணநாள்
அன்று நீ நினைத்திருக்கமாட்டாய்
உன் முந்திய வேளை உணவு உனக்கு கடைசியென்று!
அன்று நீ கண்மூடும் முன் பார்த்த பார்வையும்
உன் இறுதிப் பார்வையென எண்ணியிருக்கமாட்டாய்!
அன்று உன் உறவினர்களும் நண்பர்களும் அழுதாலும்
உன்னைக் காப்பாற்ற யாராலும் இயலாது!
அன்று அனைவரின் அழுகையும் உன் முடிவினால் என்றாலும்
நீ உலகைப் பிரியும் கடைசி நொடி - உனக்குள்
அன்று நீ அழுவதோ/சிரிப்பதோ
உன் நல்ல/தீய செயல்களைப் பொறுத்தே அமையும்!
அன்று உன்னால் குளிக்க இயலாது - ஆனால்
நீ குளிப்பாட்டப்படுவாய்!
அன்று உன்னால் ஆடை அணிய இயலாது - ஆனால்
நீ ஆடை அணிவிக்கப்படுவாய்!
அன்று உன்னால் நறுமணம் பூசிக்கொள்ள இயலாது
நீ நறுமணம் பூசப்படுவாய்!
அன்று நீ யாரையும் பார்க்க இயலாது - ஆனால்
நீ அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படுவாய்!
அன்று உன்னால் பள்ளிக்குச் செல்ல இயலாது - ஆனால்
நீ பள்ளிக்கு கொண்டுச் செல்லப்படுவாய்!
அன்று உன்னால் தொழ இயலாது - ஆனால்
நீ முன்னால் வைக்கப்பட்டு உனக்காக தொழுகை நடத்தப்படும்!
அன்று உன்னால் இறைவனிடம் பிரார்த்திக்க இயலாது
நீ ஈடேற்றம் அடைய உனக்காக பிரார்த்திக்கப்படும்!
அன்று முதல் உன் குடும்பத்தினரோடு பஞ்சணையில் உறங்க இயலாது
நீ மண்குழிக்குள் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவாய்!
அன்று உன்னால் வீட்டிற்கு திரும்பி வர இயலாது - ஆனால்
உன்னை விட்டுவிட்டு உன் உறவினர்கள் வீடு திரும்பிவிடுவார்கள்!
அந்த 'அன்று' இன்றாகக் கூட இருக்கலாம் - அதற்காக
உன் ஏக இறைவனை அஞ்சி தயாராகிக்கொள்!
-
epo paarthaalum saaguratha pathiye pechu :o
-
ean da paiya un vaya thiranthal savu thaan varuma athaum thandi nraya ruku da atha pathi podu da...