FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 28, 2011, 04:33:00 PM
-
முத்து முத்தாய் நடந்து வரும்
வெள்ளை மாளிகை ஒன்று
என் கண்ணில் விழுந்தது...
என் நெஞ்சை திருடியது
எட்டிப் பார்த்தேன்
அது எங்கோ ஓடியது...
நீலமேகம் கருமையாய் மாற
செவ்விதழ்கள் இன்னும் சிவக்க
வஞ்சிக் கொடி போனதே
என் மஞ்சம் எல்லாம் மலருதே...
சிக்கிய மீன்கள் தத்தளிப்பது போல
என்னிடம் சிக்கிய உன் கண்கள்
தத்தளித்து ஓடுகிறதே...
சேற்றில் முளைக்கும் தாமரையாய்
என்னில் நீ முளைத்தாய்...
இறுக பிடிக்க முயன்றேன்
நழுவி சென்றாய்...
சீரும் சிங்காரமாய் இருந்தேன்
சிலிர்க்கும் மேனியை அள்ளித் தந்தாய்...
சொற்பொருள் வேண்டுமென்றால்
உன் சொற்களை(திட்டுகள்) பரிசாக வழங்குகிறாய்...
அமுதம் என்று உனை நினைத்தால்
தேவாமிர்தமாய் இருக்கிறாய்...
என்றும் உன் போக்கில்
நான் இருக்க விரும்புகிறேன்
உன் நிழலாய்...
-
சேற்றில் முளைக்கும் தாமரையாய்
என்னில் நீ முளைத்தாய்...
இறுக பிடிக்க முயன்றேன்
நழுவி சென்றாய்...
nice kavithai ;)
-
js nalla think panrenga bery god poem:P