FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 28, 2011, 03:23:27 PM

Title: இனிய பறவை...
Post by: JS on August 28, 2011, 03:23:27 PM
யாரென்று சொன்னாலும்
யாராக இருந்தாலும்
மை போட்டு கேட்டாலும்
சொற்கள் ஆற்றி சென்றாலும்
ஒரு இனிய பறவை ஒன்று
குறுக்கே ஓடுகிறதே...
என் காதினில் சிந்து பாடியதே...
சலங்கை ஒலி எழுப்பி
என் சிலையை உருக்குலைக்கிறாள்
நான் கேட்டது உன் மௌனத்தை
நீ தந்தது உன் கீதத்தை...
நான் கேட்கும் அந்த கீதம்
உன் நாவில் உள்ளது
நீ சொல்லப் போகும்
ஒரு வார்த்தையில் உள்ளது...
நீராவியாய் இருக்கும் என்னை
நீர்க்கட்டி ஆக்குகிறாய் !...
உன் கரங்களால் என்னை
அணைத்தாலும் சரி,
உடைத்தாலும் சரி,
நான் செல்லப் போவது
உன் இதயத்துக்குள்...
கொடியதை தூக்கி எறி
தூயவனை கைப்பிடி...
இதுவே உன் இனிய
வாழ்விற்கு ஏணிப்படி !!...
Title: Re: இனிய பறவை...
Post by: Global Angel on August 29, 2011, 03:48:44 PM
inimayana kavithai ;)
Title: Re: இனிய பறவை...
Post by: pEpSi on August 29, 2011, 06:56:10 PM
amaithi nilavum kavithai nice js (F)