FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: ஸ்ருதி on October 28, 2012, 10:34:30 AM
-
தேவையான பொருட்கள்.
தீட்டல் சிவப்பு பச்சை அரிசி – 1 கப்
வறுத்து உடைத்த பாசிப் பருப்பு – ¼ கப்
தேங்காய்ப் பால் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
தேசிப் புளி – ¼ பழம்
உப்பு தேவையான அளவு.
காரச் சட்னி
காரச் சட்னி ஒன்றும் தயாரித்து வையுங்கள்.
செய்முறை
அரிசி பருப்பைக் கழுவி 4 கப் நீர் விட்டு அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரில் 5-6 விசில் வைத்து எடுக்கலாம்.
தேங்காயப் பால் கஞ்சி
பின் உப்பு தேங்காப் பால் விட்டு ஒரு கொதி விட்டு இறக்குங்கள்.
கஞ்சியை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்தில் சிறிதாக வெட்டிய மிளகாய், வெங்காயம், தேசிப்புளி கலந்து விடுங்கள்.
மற்றைய பகுதியை காரச் சட்னியுடன் பரிமாறுங்கள்.
இரு வேறு சுவைகளில் சுடச் சுட பால் கஞ்சி அசத்தும்.
சிறுவர்களுக்கு இனிப்பு விரும்பினால் சரக்கரை சேர்த்து இனிப்புக் கஞ்சி தயாரிக்கலாம்.