FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 24, 2011, 01:57:51 PM
-
காதல் சிலருக்கு
ஆலமரம்
அது கிளை படர்ந்து
விழுது விட்டு
நீடித்து நிற்கும்
காதல் சிலருக்கு
போதிமரம்
காதலில் விழுந்து
நொந்து நூலாகிய பின்னர்
ஞானம் வரும்
காதல் சிலருக்கு
தூக்குமரம்
அந்த காதலே
அவர்கள் கழுத்தில்
தூக்குக் கயிராக தொங்கும்
-
காதல் பலருக்கு பொழுது போக்கு
காலம் முடிந்தவுடன்
கை கழுவி சென்றுவிடுவர் ... ;) ;) ;) ;) ;) ;)