FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 22, 2011, 08:17:09 PM

Title: என் இறுதி மூச்சினில்...
Post by: JS on August 22, 2011, 08:17:09 PM
நான் பிறந்த போது
அன்னையை அடைந்தேன்...
பாசத்தை பொழியும்
தந்தையை அடைந்தேன்...
கல்வியை தரும்
ஆசானை அடைந்தேன்...
எல்லா உறவுகளையும்
நொடியில் அடைந்தேன்...
உன் இதயத் திருடன்
ஆகும் கனவை தொலைத்தேன்...
என் இறுதி மூச்சினில்
உன் பெயர் எழுத வருவாயா !!...
என் ஆழ்ந்த உறக்கத்தில்
உன் மனதை எனக்கு தருவாயா !!...
Title: Re: என் இறுதி மூச்சினில்...
Post by: Global Angel on August 24, 2011, 05:29:47 PM
Quote
என் இறுதி மூச்சினில்
உன் பெயர் எழுத வருவாயா !!...
என் ஆழ்ந்த உறக்கத்தில்
உன் மனதை எனக்கு தருவாயா !!...


superb line-..... ;)