FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 10, 2012, 10:52:54 AM

Title: தொலைதூர உறவே !
Post by: aasaiajiith on October 10, 2012, 10:52:54 AM

{ புத்தம் புதியதாய் நம் மன்றதினில் மலர்ந்திருக்கும்
ஓர் மலேய, மலர்களின் இளவரசிக்கு
மலர்கிரீடமாய் இந்த கவிக்கிரீடம் அர்ப்பணம் ..!}


தொலைதூர உறவே !

என் இதயத்தினில் இனிதாய்  உறவாடும்
தொலைதூர உறவே !

என் உயிருக்கான  உயர் ஒப்பீடான 
ஒப்பில்லா  உருவே !

பல ஆயிரம் மைல் கடந்து கண்ணாலன்
நீ இருந்த பொழுதும் , மயிலிவள்
மனதினை மயக்கி, மையல் கொண்டிடும்
மன்மத திருவே !

உன்னிடமிருந்தெனை பிரித்து வருத்தும்
நேரமதை விட, கொடுமையானது
தொட்டுவிட முடியாவிட்டாலும்
பார்க்கவும் வாய்ப்பளிக்காத  தூரமே !!

வெள்ளை நிலா - நீலக்கடல்
சூரியன் - தாமரை
தென்றல் - மலர்கள்
மலையுச்சி - மண்தரை

என தொலைதூரத்திலிருந்தும் கூட
நெருங்ககாதலிக்கும் நிரந்தர காதலை
நெஞ்சார நினைக்கும் பொழுதுகளிலெல்லாம் !

தூரம் தான் நம் உறவை
இன்னும் ஆழமாக்கும் சாரம்  என்பதை
உள்ளப்பூர்வமாய் ,உணர்கின்றேன் !
Title: Re: தொலைதூர உறவே !
Post by: supernatural on October 12, 2012, 01:00:53 PM
என தொலைதூரத்திலிருந்தும் கூட
நெருங்ககாதலிக்கும் நிரந்தர காதலை
நெஞ்சார நினைக்கும் பொழுதுகளிலெல்லாம் !

தூரம் தான் நம் உறவை
இன்னும் ஆழமாக்கும் சாரம்  என்பதை
உள்ளப்பூர்வமாய் ,உணர்கின்றேன் !

thooram anbirkum ..nesaththirkum oru poruttu alla enbathai miga azagaai unarthum varigal...

thangal varigalil kaathal suvai migunthu kondey pogirathey??kaathal thigattavillaiyo??
Title: Re: தொலைதூர உறவே !
Post by: aasaiajiith on October 12, 2012, 01:52:31 PM
என தொலைதூரத்திலிருந்தும் கூட
நெருங்ககாதலிக்கும் நிரந்தர காதலை
நெஞ்சார நினைக்கும் பொழுதுகளிலெல்லாம் !

தூரம் தான் நம் உறவை
இன்னும் ஆழமாக்கும் சாரம்  என்பதை
உள்ளப்பூர்வமாய் ,உணர்கின்றேன் !

thooram anbirkum ..nesaththirkum oru poruttu alla enbathai miga azagaai unarthum varigal...

thangal varigalil kaathal suvai migunthu kondey pogirathey??kaathal thigattavillaiyo??





 வாழ்த்திற்க்கும், இட்ட கருத்திற்க்கும், நன்றி !

நேரமும் இடமும் இருக்கின்றதென்பதற்காக
சிறுபிள்ளைதனமாய், சில்லரைத்தனமாய்
ஏதும் கேள்விகள் கேட்காமல் , உண்மையில்
சீரும் சிறப்புமான ஒரு கேள்வியினை
கேட்டிருக்கின்றீர்  "சிறப்பு இயற்க்கை" அவர்களே !

உங்கள் கேள்விக்கு கொஞ்சம் விளக்கமாய்
பதிலளிக்க விரும்புகிறேன் ....
கொஞ்சம் அவகாசம் வேண்டும் !
Title: Re: தொலைதூர உறவே !
Post by: supernatural on October 12, 2012, 08:35:39 PM
en keylviku bathil alippathaai kooriyathey miga inimaiyaana vishayam ..
vendiya avakaasam eduthukkolungal..

kavithai varigalaal ..athum kaathal kavithaigalil sariththiram padaikka en vaazththukkal..
varigalai aavaludan ethirpaarthu naan...
Title: Re: தொலைதூர உறவே !
Post by: aasaiajiith on October 12, 2012, 10:00:32 PM
அதுசரி , சரித்திரம்  படைப்பதெனக்கு  எண்ணமில்லை  என்றாலும்

உன்  வாழ்த்தையே  கோரிக்கையாய்  கருதி  படைக்க   முனைவேன்  இயற்கையே  !!!