FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on September 27, 2012, 04:28:59 PM

Title: நான் வர வேண்டுமா வேண்டாமா ?
Post by: viswa on September 27, 2012, 04:28:59 PM
இரவில் வந்தால்
இனிதாய் இருக்கும்
பல அம்மாக்களின் நினைப்பு இது ...

பகலில் வந்தால்
இனிதாய்
இருக்கும் பள்ளிச் சிறார்களின்
நினைப்பு இது...

ஓங்கி அடித்து ஓயலாம் அல்லவா ?
பலரின் நினைப்பு இது!

வந்தாலும் குறை!
வராவிட்டாலும் குறை!

நான் வரா விட்டால் திட்டுபவர்கள்
வந்தால் எப்போது
நிற்குமோ என்று சலிப்பு அடைகிறார்கள் ..

என் செய்வேன் நான்?
 நான் வர வேண்டுமா
வேண்டாமா ?
வருத்தத்துடன் மழை ! :P
Title: Re: நான் வர வேண்டுமா வேண்டாமா ?
Post by: ஆதி on September 27, 2012, 04:31:16 PM
நல்ல இருக்கு விஸ்வா, தொடர்ந்து எழுதுங்க‌
Title: Re: நான் வர வேண்டுமா வேண்டாமா ?
Post by: Gotham on September 27, 2012, 05:28:38 PM
நேத்து மழையில நெனஞ்சுட்டீங்களோ?
எங்க ஏரியால பெய்யவே இல்லே..