FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 26, 2012, 11:04:00 PM

Title: பிரிவினால்.பிறந்த.வலி(ரி)கள்.......
Post by: aasaiajiith on September 26, 2012, 11:04:00 PM

நீ இல்லா பொழுதுகளில் 
தடுமாறும் என் மனநிலை
கடும் தட்டுபாட்டில் தத்தளிக்கும்
தமிழக மின்சாரத்துறையை விட
படுமோசம் .....

***********************************
அமைதியாக தானே அமர்ந்து
என் நிலைபாட்டினை நிலைபடுத்துகின்றேன் ?
இருந்தும் ஏனோ ?
உன் நினைவுகள், என் மனதை
தடியடி , தண்ணீர் பீய்ச்சி அடித்தளை தாண்டி
துப்பாக்கிச்சூடு நடத்தி அட்டூழியம் செய்கிறது ???

***********************************
காலவரையற்ற   பதிப்பிடா  போராட்டத்தில் அமர்ந்தவனை
கலந்தாலோசித்து  பேச்சுவார்த்தை நடத்துவோமென, உன்
கவின் முகத்தை கையூட்டாய் காட்டிக்கொடுத்து
கள்ளத்தனமாய் என் போராட்டத்தை களைத்த
கல் நெஞ்சக்காரி நீ !

***********************************

ஓரிருநாள் பிரிவையையே
ஓர் யுகபோராட்டமாய்  கடந்திடும் பொழுது
சர்வசாதாரணமாய் , ஒரு வாரம் பிரிந்து செல்ல
உன் மனம் எப்படி சம்மதித்தது ??
ஓஹோ !
தமிழகத்தின் பெண்  நீ எனும் நினைப்பு தந்த
தாயுள்ள தவப்பரிசோ ??
..

**********************************

Title: Re: பிரிவினால்.பிறந்த.வலி(ரி)கள்.......
Post by: Anu on September 27, 2012, 06:56:35 AM

நீ இல்லா பொழுதுகளில் 
தடுமாறும் என் மனநிலை
கடும் தட்டுபாட்டில் தத்தளிக்கும்
தமிழக மின்சாரத்துறையை விட
படுமோசம் .....

kavithai arumai ajith.

Title: Re: பிரிவினால்.பிறந்த.வலி(ரி)கள்.......
Post by: supernatural on September 27, 2012, 11:43:44 PM
அமைதியாக தானே அமர்ந்து
என் நிலைபாட்டினை நிலைபடுத்துகின்றேன் ?
இருந்தும் ஏனோ ?
உன் நினைவுகள், என் மனதை
தடியடி , தண்ணீர் பீய்ச்சி அடித்தளை தாண்டி
துப்பாக்கிச்சூடு நடத்தி அட்டூழியம் செய்கிறது


ninavugalin valimaiyai alagaai kooriyulla varigal..

ஓரிருநாள் பிரிவையையே
ஓர் யுகபோராட்டமாய்  கடந்திடும் பொழுது
சர்வசாதாரணமாய் , ஒரு வாரம் பிரிந்து செல்ல
உன் மனம் எப்படி சம்மதித்தது ??
ஓஹோ !
தமிழகத்தின் பெண்  நீ எனும் நினைப்பு தந்த
தாயுள்ள தவப்பரிசோ ?


pirivin avasththaiyai varigalaakki..
privin valigalai  kavithaiyaaki..
arumaiyaai oru padaippu..