FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dong லீ on September 26, 2012, 08:38:17 PM

Title: இன்று(26/09/12) நான் எழுத முயன்ற கவிதை
Post by: Dong லீ on September 26, 2012, 08:38:17 PM
மலர்கள் நடுவில்
என் பொன்மலர் ..
 

அவள் மூச்சு பட்டு
பூக்களுக்கு புது நறுமணம் ..

அவள் வியர்வை துளிகள்
பூக்களில் சிந்த
தேன் துளிகளுக்கு
இனி இனச்சாவு ..


மலர்கள் கதறி
அழும் சத்தம் ..
ஒரு நாளில்
வாடிவிடுவோமே
என்ற மரண பயத்தில்
Title: Re: இன்று நான் எழுத முயன்ற கவிதை
Post by: Gotham on September 26, 2012, 09:04:14 PM
எப்படி லீ அண்ணே உங்களால மட்டும்.. என்னவோ போங்கண்ணே..!

பூவெல்லாம் அவள் வாசம்
அவளோ உன் வசம்!!
Title: Re: இன்று நான் எழுத முயன்ற கவிதை
Post by: ஸ்ருதி on September 26, 2012, 10:28:08 PM
சிந்தனை குதிரை ஓட்டம் காண தொடங்கி விட்டது....நல்ல இருக்கு கவிதை  :)
Title: Re: இன்று நான் எழுத முயன்ற கவிதை
Post by: Global Angel on September 27, 2012, 01:23:49 AM
 மச்சான் உன் கற்பனைகள் எல்லாம் சூப்பர் ... கவிதைக்கு முக்கியமான சந்தங்களையும் கவனத்தில் கொண்டால் சூப்பர் கவிஞன் ஆகிடுவேடா .....வாழ்த்துக்கள் மச்சான் உண்மையாவே உன் கற்பனை அருமையோ அருமை
Title: Re: இன்று நான் எழுத முயன்ற கவிதை
Post by: Anu on September 27, 2012, 06:52:55 AM
சிந்தனை குதிரை ஓட்டம் காண தொடங்கி விட்டது....நல்ல இருக்கு கவிதை  :)
naanum ithai vazhi mozhiyaren sri :)