FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 16, 2011, 09:04:19 PM

Title: காதல் செய்தது துரோகம்...
Post by: JS on August 16, 2011, 09:04:19 PM
காதலை நேசித்தேன்
காதலின் செயலால்
என்னை உணர்ந்தேன்...

காதலிலாமல் நான் இல்லை என்றேன்
காதலுக்காக என்னை அர்ப்பணித்தேன்
காதலே நிம்மதி என்றேன்...

காலத்தின் வேகத்தால்
காதலை மணந்தேன்
அது கொண்ட அன்பினால்
நான் என்னை மறந்தேன்...

காலச் சக்கரம் சுழல
எனக்குரியவனை அறிந்தேன்
சிறிது தாமதமாக...

ஏற்கத் தொடங்கினேன் துயரத்தை
வெம்பினேன் மனது தாங்கவில்லை
நான் செய்த பாவம்
காதல் செய்தது துரோகம்...
Title: Re: காதல் செய்தது துரோகம்...
Post by: Global Angel on August 16, 2011, 09:13:10 PM
Quote
ஏற்கத் தொடங்கினேன் துயரத்தை
வெம்பினேன் மனது தாங்கவில்லை
நான் செய்த பாவம்
காதல் செய்தது துரோகம்...

 :(