FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on September 12, 2012, 11:39:08 AM
-
அப்படி ஏதும்
மேன்மை இல்லை
என்னிடம்
ஓங்கும் அளவினில்,
ஆழ் கடலினை,
கடந்திடும் அளவில்லா
மெய் காதலினை
தவிர்த்து .
காதலித்துப்பார்,
என்றென் எழுத்துலகாசான்
எப்போதிருந்தோ,
எடுத்துரைத்தபோதும்
ஏடெடுத்து மட்டும்
பார்த்தேனே தவிர ,
ஏறெடுத்து பார்த்ததில்லை
காதலினை .
இன்றோ
நேரெதிரே பார்க்காதே
ஆண்டவனை காதலிக்கும்
ஆத்திகர்போல
பெரியாரை காதலிக்கும்
நாத்திகர் போல
பெரிதாக காதலிகின்றேன்
உன்னை .
காரணமாய் ,
யாதுண்டென ,கூறிடவே
கோரிடுவோர் ஊரினிலே
பலருண்டு
என்னென்று சொல்லிடுவேன்
காரணத்தை ?
ஒன்றிரண்டு உண்டானால்
சொல்லிடலாம்
உச்சிமுதல் பாதம்வரை
ஒவ்வொன்றாய், மனம்வருடி ,
தினம் திருடிடும் ,
காதல் காரணங்கள்
நூருண்டு
கேள்வி எழுந்துவரும்
திசை அது ,நீ
வரும் திசையானால் ,பதிலை
தருவதர்க்கிசைவே
தருவே ! திருவே !