FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 13, 2011, 08:17:19 PM
-
உறக்கமே இல்லை என்றேன்
கனவாய் நீ வந்தாய்...
மாற்றமே இல்லை என்றேன்
மாறுதலாய் நீ கிடைத்தாய்...
ஏனோ என்னிடம் வந்தாய்
என் அருகில் நின்றாய்
வலிய வந்தாய்
வெட்கம் தந்தாய்...
விதியை நம்பவில்லை முன்னால்
விதி தந்த உன்னை நேசிக்கிறேன்
என் சுவாசத்தை உனக்கு யாசிக்கிறேன்...
விதியின் விளையாட்டு என்றாலும்
நீ எனக்கு கிடைத்த வாழ்வின் படி...
-
உறக்கமே இல்லை என்றேன்
கனவாய் நீ வந்தாய்...
மாற்றமே இல்லை என்றேன்
மாறுதலாய் நீ கிடைத்தாய்...
;)nice