FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on September 05, 2012, 06:52:23 AM
-
ஏடுகள் நிறைகிறது
உன் இதழில்
பதிக்க இயலாததை
ஏடுகளில் பதிப்பதால்......
******
கடவுள் மிகவும் கஞ்சன்....
முத்தமிட இரு உதடுகள் சரி...
அதனை பெறவும்
இரு..
உதடுகள் தானா?!
******
புரையெறினால் யாரேனும் நினைபர்கலாம்...
எனக்கு புரையேறும் சமயம்...
நினைப்பது நீயாக வேண்டாம் என்றே வேண்டினேன்...
புரையேறும் நிமிடங்கள் மட்டுமே நீ என்னை
நினைப்பதை விரும்பாதவளாய்....
-
கடவுள் மிகவும் கஞ்சன்....
முத்தமிட இரு உதடுகள் சரி...
அதனை பெறவும்
இரு..
உதடுகள் தானா?!
KADAVUL PERUM VALLALGALUKELLAM VALLAL
PERUM IDHAZHGAL SILA ENDRAPODHUM
THARUM INIMAI IDHAZHGALO PARPALA....
IPPADIKKU
SIGAPPU ROJAA
கடவுள் பெரும் வள்ளல்களுகேல்லாம் வள்ளல்
பெரும் இதழ்கள் சில என்றபோதும்
தரும் இனிமை இதழ்களோ பற்பல ....
இப்படிக்கு
சிகப்பு ரோஜா
******
புரையெறினால் யாரேனும் நினைபர்கலாம்...
எனக்கு புரையேறும் சமயம்...
நினைப்பது நீயாக வேண்டாம் என்றே வேண்டினேன்...
புரையேறும் நிமிடங்கள் மட்டுமே நீ என்னை
நினைப்பதை விரும்பாதவளாய்....
color=red]ANDHAVAGAIYINIL
ADHIRSHTASAAALI NAAN
ENNAVAL ENNAI,
SWAASIKKUM POZHUDHU
MATTUMEY NINAIKKINDRAAL
ENNAI POLAVEY ......
VAAZTHUKKAL ANU KAVIYE....!!!!!
அந்தவகையினில்
அதிர்ஷ்டசாலி நான்
என்னவள் என்னை ,
சுவாசிக்கும் பொழுது
மட்டுமே நினைக்கின்றாள்
என்னை போலவே ......
வாழ்த்துக்கள் அணு கவியே ....!!!!![/color]
-
//கடவுள் மிகவும் கஞ்சன்....
முத்தமிட இரு உதடுகள் சரி...
அதனை பெறவும்
இரு..
உதடுகள் தானா?!
//
இது போன்ற நுண்ணுணர்வு வரிகள் தான் காதல் கவிதைகளின் பலமே, அருமை
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தே தலை சுற்றி போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
என்று வைரமுத்துவின் வரிகளும் நினைவுக்கு வந்தன
பகிர்வுக்கு நன்றிகள் அனு
-
//கடவுள் மிகவும் கஞ்சன்....
முத்தமிட இரு உதடுகள் சரி...
அதனை பெறவும்
இரு..
உதடுகள் தானா?!
//
இது போன்ற நுண்ணுணர்வு வரிகள் தான் காதல் கவிதைகளின் பலமே, அருமை
எனக்கு என்னமோ இது காதல் போல தெரியலை ... காமம் போல்தான் தெரிகிறது ஒருவேளை அதெல்லாம் கலந்ததுதான் காதலாய் இருக்கும் போல
;D
-
ஹி.. ஹி..
இது காதல் தான், களவு ஒழுக்கம், கற்பு ஒழுக்கம் என்று சங்க இலக்கியத்தில் படிச்சிருப்பீங்க இல்ல, இரண்டிலுமே காமம் உண்டு
அதனால்தான் தோழி இலக்கியங்களில் ஊர் அலர் தூற்றுவதற்கு முன் வந்து வரைவு கொண்டு போ என்று தலைவனுக்கு அறிவுருத்துவாள்
வரைவு = திருமணம்
-
oh hehe thanks