FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 12, 2011, 04:03:46 PM

Title: உன்னாலே...
Post by: JS on August 12, 2011, 04:03:46 PM
உயிர் கொண்டு வந்தாய்
உயிரே நீதானடி !...
நிழல் போல வந்தாய்
என் நிஜமே நீதானடி !...
வெட்கம் போல வந்தாய்
என் வேதனையே நீதானடி !...
சிரித்து பேசும் அழகே
என் சிரிப்பை ஏன் பறித்தாயடி !...
உயிர்த்து எழும் மௌனமே
என் பேச்சே நீதானடி !...
வலிய வரும் வம்பே
என் அமைதியே நீதானடி !...
சிறகடிக்கும் வானமே
என் வெளிச்சமே நீதானடி !...
எனக்குள் ஒளிந்த பொன்மகளே
என் கண்டுபிடிப்பே நீதானடி !...
என்னை உருவாக்கிய மரிக்கொழுந்தே
என் ஜீவனும் நீதானடி !...
என் எல்லா மாற்றங்களும்
பெண்ணே உன்னாலே...
நீ என்றும் என் வெற்றிக்கு
பின்னலே. . . .
Title: Re: உன்னாலே...
Post by: Global Angel on August 12, 2011, 07:31:51 PM
இனிமையான கவிதை