FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on August 12, 2011, 03:13:45 PM

Title: புதையலாக இல்லாமல்
Post by: ஸ்ருதி on August 12, 2011, 03:13:45 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.bharatonline.com%2Fkarnataka%2Fpics%2Fmoney-exchange-karnataka.jpg&hash=e9f1ee9cf797dfa87a62a9fe1d18361510add2e2)

நீ இல்லாததால்
வாழ்க்கையும்
நீ இருப்பதால்
நிம்மதியும்
தொலைத்து
உன்னையே தேடி
திரிகிறோம் தினமும்...

உனக்கு பிடித்த இடம் எதுவோ??
பஞ்சனைக்கு கீழும்
பட்டுவஸ்த்தர போர்வையுமா??
ஏழையின் சுருக்கு பையில்
என்றாவது போகும்
திருநாளாய்
வந்து போகிறாய்...

உன்னை பதுக்க
நினைக்க வில்லை
எங்களை பாதுகாக்க வா
இருக்கும் இடத்தில்
புதையலாக இல்லாமல்
இல்லாத இடத்தில
தீபமாய் ஒளியேற்ற வா...

கருப்பாய் மாறி
குப்பைக்கு செல்லாமல்
உழைத்து சிவந்த கைகளுக்கு
உன்னதமாய்..
ஒரு வேலை உணவேனும்
உன் தயவால் உண்ணும்
வரம் தந்து
துயர் நீக்க வா...

ஏழை குடிசைகளிலும்
உனக்காக இரும்பு பெட்டி
துயரத்தோடு துருபிடித்து
துடித்து கொண்டிருக்கிறது
Title: Re: புதையலாக இல்லாமல்
Post by: Global Angel on August 12, 2011, 03:17:10 PM
ஏழை குடிசைகளிலும்
உனக்காக இரும்பு பெட்டி
துயரத்தோடு துருபிடித்து
துடித்து கொண்டிருக்கிறது
Quote

காசு இல்லாதவன் வாழ்வு கஷ்டம் ... நல்ல கவிதை  ;)

Title: Re: புதையலாக இல்லாமல்
Post by: ஸ்ருதி on August 12, 2011, 03:23:09 PM
நன்றிகள்  ;) ;) ;)