FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 31, 2012, 05:40:51 PM

Title: காக்கைகளின் கால்களைப் போல முகங்களும்..
Post by: ஆதி on August 31, 2012, 05:40:51 PM
நமக்கு பரிட்சயமான இடங்களில் அலையும் காக்கைகள்
மனிதனின் கால்கள் உற்றிருப்பவை

ஓட்டுக்கூறையில்.. குளியலறை சுவற்றில்.. கரைந்திரந்து
கூட்டத்தொடு பகிர்ந்துண்ணுல் அறியாத
சுயநலமானவை..

மிக உயர்ந்து பறக்கும் சிறகுகளுற
சகக்காக்கையை பருந்துக்கு கூலித்தரும்
அரக்க மனமுண்டவை..

தன் வடையைக்காத்துக்கொள்ள
நரிகளிடத்து
பிறர் வடையை காட்டிக்கொடுக்கும் வஞ்சமுள்ள‌வை..

யாரோ கல்லிட்டு நிறைத்த ஜாடியை ஆக்ரமித்து
நீரையும், ஜாடியையும் தனதென்று சொந்தமுரைக்கும்
தயக்கமற்ற பொய்ச்சொல்லுடையவை..

தமை மிரட்டும் கூகைகளுக்கு
காவல் நாயாக ஒப்பந்தித்துக் கொண்டு
இனங்காக்கும் காக்கைகளை
தூரோக‌த்தால் வேட்டையாடும் சூழ்ச்சியான‌வை..

சில பனம்பழங்களை சிதைக்கவே
மேலழுந்த அமர்ந்து விழுப்பிப்பவை..

நமக்கு பரிட்சயமான இந்த காக்கைகளுக்கு
கால்களைப் போன்று
முகங்களும்
மனிதனுடையவை..
Title: Re: காக்கைகளின் கால்களைப் போல முகங்களும்..
Post by: Global Angel on September 01, 2012, 02:15:54 AM
மனித துரோகங்கள் ... மிக அழகாக சொல்லி இருகின்றீர்கள் ஆதி ... காக்கைகக்கும் மனிதர்களுக்கும் நேர்ந்கிய தொடர்ப்பு .... அதுதான் காக்கைகளும் மனிதை போலவே அம்சங்களை வெளிபடுத்துகின்றது போலும் ...

அருமை ... சமுக சிந்தனை கவிதை