FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 31, 2012, 03:56:52 PM
-
வாசகர்கள் ....
நல்வரிகளை வாசித்திடவேண்டி
மன்றத்தினில், தற்காலிகமாய்
வசித்திடும் வானம்பாடிகள்
புதிதாய்,பொலிவாய் பதிப்பினை
பதித்திடும் திறமிருந்தும்
பதிவிடா வேடிக்கை வேந்தர்கள்
நற்பதிப்புக்களினை தரம்கண்டு
திறம்கொண்டு வாசித்தும்
பதில்தர வழியில்லா சூழ்நிலை கைதிகள்