FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 31, 2012, 11:01:57 AM
-
அருகம்புல்லின் சாறினை அதிகாலையில்
வெறும் வயிற்றினில் பருகும் போது
கசப்பின் கடுமை குரல்வளையை பிடித்தாலும்
பருகியப்பின் அதனால் நாம்பெறும்
குணநலன் அது பன்மடங்கு பெருகுவதை போல்
கவிதை என்பது படைக்கும் வரை
கடினங்களிலேயே மிக கடினம்
படி சிரத்தைக்கு பிறகு படித்துவிட்டால் - பின்
பெறுகின்ற பரவசமோ பழரசம் போல்
என் கவிதை அனுபவம்..
-
கவிதையின் பிறப்பை அழகாய் ...
எளிமையாய்.. கூறும் வரிகள்..
-
//அருகம்புல்லின் சாறினை அதிகாலையில்
வெறும் வயிற்றினில் பருகும் போது
கசப்பின் கடுமை குரல்வளையை பிடித்தாலும்
//
முன்பே சொன்னதுதான் கையாளும் உவமை பொருந்த வேண்டும்
அருகம் புல் சாரு கசக்கும் என்று சொல்வதே பொருள் குற்றம்
அருகம் புல் சாரு சுவையின்றிதான் இருக்கும்