FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 31, 2012, 11:01:57 AM

Title: என் கவிதை அனுபவம்..
Post by: aasaiajiith on August 31, 2012, 11:01:57 AM
அருகம்புல்லின் சாறினை அதிகாலையில்
வெறும் வயிற்றினில் பருகும் போது
கசப்பின் கடுமை குரல்வளையை பிடித்தாலும்
பருகியப்பின் அதனால் நாம்பெறும்
குணநலன் அது பன்மடங்கு பெருகுவதை போல்

கவிதை என்பது படைக்கும் வரை
கடினங்களிலேயே மிக கடினம்
படி சிரத்தைக்கு பிறகு படித்துவிட்டால் - பின்
பெறுகின்ற பரவசமோ பழரசம் போல்

என் கவிதை அனுபவம்..
Title: Re: என் கவிதை அனுபவம்..
Post by: supernatural on August 31, 2012, 01:00:31 PM
கவிதையின் பிறப்பை அழகாய்  ...
எளிமையாய்.. கூறும் வரிகள்..
Title: Re: என் கவிதை அனுபவம்..
Post by: ஆதி on August 31, 2012, 01:40:56 PM
//அருகம்புல்லின் சாறினை அதிகாலையில்
வெறும் வயிற்றினில் பருகும் போது
கசப்பின் கடுமை குரல்வளையை பிடித்தாலும்
//

முன்பே சொன்னதுதான் கையாளும் உவமை பொருந்த வேண்டும்

அருகம் புல் சாரு கசக்கும் என்று சொல்வதே பொருள் குற்றம்

அருகம் புல் சாரு சுவையின்றிதான் இருக்கும்