FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on August 27, 2012, 07:53:55 AM
-
வளைந்தோடும் உன் கழுத்தோர
முடிக்கற்றைத் தூரிகையில்
ஆசையாய் தீட்டிப் பார்க்கிறேன்
அழகான என் காதலை
பின்னிப்பிரியும் கால் விரல்களில்
பிரித்தெடுத்துக்கொள்கிறேன் கொஞ்சம்
இளம் சூட்டினை நரம்புகளில் மிதக்கும்
இரத்த திசுக்களுக்காக
உன் பூவுடல் இறுகத் தழுவிய
முந்தானையின் ஒரு முனை
புயலாய் வந்து மெலிதாய் தடவிப்போகிறது
என் புறங்கழுத்து வியர்வைத் துளி இரண்டை
கைகளில் ஏந்தி, மடி மீது தாங்கி
பாதத்தில் மெலிதாய் பூட்டிய கொலுசு
செல்லமாய் சிணுங்குகிறது
இன்னும் கொஞ்சம் இறுகப் பூட்டச்சொல்லி
குறுக்கும் நெறுக்கும் பயணிக்கும்
ஓயாத பார்வைக்கோடுகள்
எப்படிப்படித்தாலும் இனிக்கும்
கவிதையின் தடம் புரண்ட வரிகளாக
-
Ivvarigalai sumandha Azhagu Varnanaikku
EN VARIGALAAI IRUNDHIRUNDHAAL
THANDAVAALATHTHIRKKU BADHILAAGA
EN JEEVNAI KODUTHTHUIRUPPEIN THADAMAAGA ,THAGUM IDAMAAGA
KURAINDHA PATCHAM THADAM PIRAZAAMAL IRUNDHIDA.....
NALLA VARIGALL....!!!
-
Ithula 'unakaana en kaathalai' vari matum vera vidama iruntha oru thaay kuzhanthaiyin aravanipai solravidhama irukum
Nala kavithai
-
மிக பிரமாதம், நீங்கள் அனுமதி தந்தால், "வாருங்கள் கவிதை பற்றி பேசலாம்" திரியில் இந்த கவிதையை உதாரணத்துக்காக பயன்படுத்தி கொள்வேன், இல்லை என்றாலும் சொல்லுங்கள், என் விரிவான விமர்சனத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்
-
nandri ajith, gotham, aadhi.
ungaloda suggestion kooda romba nalla iruku..
aadhi unga kavithai topic la use seidhukonga..
enakum sandosam thaan.
raamarku anil seidha udavi pola ..
unmailyil enaku kavidhai ezhudha varaadhu.
idhu enga irundho sutta kavithai.
enaku kavithai rasikka theiryum:)
-
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
நல்ல ரசிகர்களால் நல்ல கவிதை நிச்சமாய் எழுத முடியும்
அதற்கு கவிதை மீது மட்டுமே பரிட்சயம் தேவையில்லை நாவல், கதை மீது வாசிப்பானுபவம் இருத்தலும் போதும்
-
உண்மைதான் ஆதி .. சிறு வயதிலேயே எனது பதின் மூன்றாவது வயதிலேயே தமிழ் படிக்கும் வாய்ப்பை இழந்தவள் நான் .. இருந்தும் என் ஆர்வத்தால் பல புத்தகங்கள் கிடைக்கும் பத்திரிகைகள் வாசித்து தமிழை ஓரளவு தாராளமாகவே கற்று வைத்திருகின்றேன் .. அதன் பயன் .. நான் கவிதை எழுதுவது ... ஆர்வம் கற்பனை இருந்தால் தமிழ் தானாக தவழும் ...
அனுமா தங்களின் கவிதை சுட்ட கவிதை என்றாலும் நீங்கள் படிக்கும் எல்லா கவிதைகளையும் நீங்கள் இங்கே பிரசுரிக்கவில்லை .. தங்களால் இனம் தரம் பிரிக்கபட்ட கவிதைகள்தான் பதிவிட படுகின்றன ... நீங்கள் ரசனை உள்ளவர் என்பது புலனாகிறது ... நீங்கள் சொந்தமாக முயற்சித்து பார்க்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் ..
-
//சிறு வயதிலேயே எனது பதின் மூன்றாவது வயதிலேயே தமிழ் படிக்கும் வாய்ப்பை இழந்தவள் நான் .. இருந்தும் என் ஆர்வத்தால் பல புத்தகங்கள் கிடைக்கும் பத்திரிகைகள் வாசித்து தமிழை ஓரளவு தாராளமாகவே கற்று வைத்திருகின்றேன் .. அதன் பயன் .. நான் கவிதை எழுதுவது ... ஆர்வம் கற்பனை இருந்தால் தமிழ் தானாக தவழும் ...//
என் வாழ்வில் அப்படியே தலைகீழ், 12 வயதில்தான் தமிழ்படிக்கவே ஆரம்பித்தேன், அதற்கு முன் அ, ஆ கூட தெரியாது
-
ஹஹா விபரம் அறிந்த வயதில் நீங்கள் படிக்க ஆரம்பித்ததால்தான் இப்படி நன்றாக எழுதுகின்றீர்கள் ... நாங்கள் குழந்தையில் படித்தால் குழந்தை தனமாகவே எழுதுகிறோம் ஹஹஹா
-
ஹா ஹா ஹா :D
-
அனுமா தங்களின் கவிதை சுட்ட கவிதை என்றாலும் நீங்கள் படிக்கும் எல்லா கவிதைகளையும் நீங்கள் இங்கே பிரசுரிக்கவில்லை .. தங்களால் இனம் தரம் பிரிக்கபட்ட கவிதைகள்தான் பதிவிட படுகின்றன ... நீங்கள் ரசனை உள்ளவர் என்பது புலனாகிறது ... நீங்கள் சொந்தமாக முயற்சித்து பார்க்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் ..
நல்ல ரசிகர்களால் நல்ல கவிதை நிச்சமாய் எழுத முடியும்
paaraattugaluku nandri aathi and rose dear
ellam solringannu oru naal full ah utkarndhu yosichen.
ennangalai varigalaai kondu vara ellaaraalum mudiyaradhu illa.
varigal amaika vaarthai thedum podhu ellam engavo odi olinjikuthu.
adhukum bayam thaan pola. :)