FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 06, 2012, 10:44:45 AM

Title: முரண்
Post by: ஆதி on August 06, 2012, 10:44:45 AM
என் குணங்கள்
முள் முளைத்து
கீறிவிடுகின்றன் உன்னை...

அரக்கத்தனம் வழியும்
அந்த பொழுதுகளில்
பேய்க்குரல் கொண்டு
அலறும் என்னை
எப்படி சகிக்கிறாயோ...

நீ எண்ணிய கணவனின்
அம்சம்
ஒரு விழுக்காடாவது
என்னிடம் உள்ளதா ?

ஒவ்வொரு பெண்ணுக்கும்
கணவன் நிறைவேற்ற வேண்டிய
விருப்பங்கள் இருக்கும்..
அதில் எத்தனை
நான் நிறைவேற்றி இருக்கிறேன் ?

உன் கனவு கோட்டையின்
எத்தனை சுவர்களை
நான் தகர்த்திருக்கிறேனோ ?

என் கோபம் உடைத்து
கண்ணாடித் துண்டுகளாய்
உன் வெறும் மனதில்
வீசிய வார்த்தைகளை எண்ணுகையில்
இதயத்தை மெல்ல அறுக்கிறது
நீ அழுத கண்ணீர் துளிகள்...

நீயோ-
வழக்கம் போல்
என்னை எழுப்பி
எதுவுமே நடக்காத தோரணையில்
காப்பி தருகிறாய்
சிரித்த முகத்துடன்.....
Title: Re: முரண்
Post by: ! SabriNa ! on August 06, 2012, 11:04:38 AM
nice one..