FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on July 30, 2012, 08:05:06 PM

Title: பாம்பும் கடலும் - சிலேடை 4
Post by: ஆதி on July 30, 2012, 08:05:06 PM
பேனாவும் பெண்விழியும் - சிலேடை1

வெண்பா

நீண்டிருக்கும் சுற்றும் நிலம்நோக்கும் மைப்பூணும்
ஆண்டிருப் போனாட்சி சாய்க்கும் ஜெகமதிர்த்தும்
சொல்லா தனசெய்யும் சொல்லுக பேனாவும்
பொல்லாத பெண்விழியும் ஒன்று!

பிகு:- பேனா - ballpoint என கொள்க.. தவறுகள் இருந்தாலும் சுட்டுக மக்கா..


நீண்டிருக்கும் - நீளமாக இருக்கும்

சுற்றும் - எழுதுகையில் பேனாவின் முனை சுற்றும் / சுற்றும் விழி சுடரே :)


நிலம்நோக்கும்
- எழுத முனைகையில் நிலம் நோக்கும் / நாணத்தில் இமை மடுத்து நிலம் நோக்கும்

மைப்பூணும் - மை நிரப்பில் கொள்ளும் / மை தீட்டுவர்


ஆண்டிருப்போன் ஆட்சி சாய்க்கும் - பத்திரிகைகளின் எழுத்தாலோ எத்தனையோ ஆட்சி மகுடங்கள் மாறி இருக்கின்றன / காதலுக்காக மகுடம் துறந்தவர் பலர் உளர்


ஜெகமதிர்த்தும் - புரட்சி எழுத்துக்கள் சரித்திரங்களை புரட்டி போட்டிருக்கின்றன / அபிநய விழிகள் அவையை அதிர செய்யும் (பரதத்தில்)

சொல்லாதன செய்யும் - மேலே குறிப்பிடாத இன்னும் பலவற்றையும் செய்யும்


சொல்லுக பேனாவும் பொல்லாத பெண்விழியும் ஒன்று!
- ஆகையால் சொல்லுக பேனாவும் வயப்படுத்தும் பெண்விழியும் ஒன்று என்று

Title: Re: பேனாவும் பெண்விழியும் - சிலேடை1
Post by: Global Angel on July 30, 2012, 08:11:27 PM
பேனாவும் பெண் விழியும் ஒன்று ... ஹஹஹஹாமிகவும் அருமையான விளக்கம் ... நன்று ஆதி ...உங்கள் முதல் பதிவே முத்தாக உள்ளது தொடரட்டும் உங்கள் பயணம்
Title: Re: பேனாவும் பெண்விழியும் - சிலேடை1
Post by: ஆதி on July 30, 2012, 10:36:25 PM
பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றி Global Angel
Title: Re: பேனாவும் பெண்விழியும் - சிலேடை1
Post by: Anu on July 31, 2012, 11:16:17 AM
Very Nice Kavithai aadhi ..
Title: Re: பேனாவும் பெண்விழியும் - சிலேடை1
Post by: ஆதி on September 14, 2012, 11:48:21 AM
நன்றிங்க அனு அக்கா
Title: காதலும் கடனும் - சிலேடை 2
Post by: ஆதி on September 14, 2012, 11:50:25 AM
காதலும் கடனும் - சிலேடை 2

 வெண்பா

கைதனை நீட்டுவாய், சிரிப்பில் அசடுசிந்தும்
பொய்வாய் உறுதிகள் ஈந்திடுவாய் - தைரியம்
தூர்ந்திட ஓடுவாய் தொங்குவாய் ஆதலினால்
நேர்படும்,கா தல்முன் கடன்!

விளக்கம்:-

கைதனை நீட்டுவாய் - காதல் கரம் நீட்டுவாய் உன் இணை நோக்கி..

கடன் வாங்க மற்றவர்களிடம் கைநீட்டுவாய்..

சிரிப்பில் அசடு சிந்தும் - சின்னச் சின்ன ஊடல்களில் உதட்டு சிரிப்பில் அசடு சிந்தும்..

கடன் வாங்கும் போதும் கடன்காரனிடம் தவனைக் கேட்கும் போதும் உதட்டுச் சிரிப்பில் அசடு சிந்தும்..

பொய்வாய் உறுதிகள் ஈந்திடுவாய் - காதலிக்கு இணையைக் கவர* நிறையக் கதைவிடுவாய்..

பாக்கிகளைக் கொடுப்பதாய் நாளை அடுத்தவாரம் முதல்தேதியென பொய்வாய் உறுதிகள் ஈதிடுவாய்..

தைரியம் தூர்ந்திட ஓடுவாய் - எதிர்ப்புகளை எதிர்க்க முடியாத பட்சத்தில் இணையை இழுத்துக் கொண்டு ஓடுவாய்..

கடனில் முழ்கிப்போகையில் தலைமறைவாவாய்..

தொங்குவாய் - குழைந்து கெஞ்சிப்பார்ப்பாய் இணையை எப்படியும் திருமணம் முடிக்க.. இல்லை.. தாலியாய் இணையின் கழுத்தில் தொங்குவாய்..

கடன்காரனில் இருந்து தப்பிக்க முடியாத சூழலில் தூக்கிலும் தொங்குவாய்..


இப்படி ஒற்றுமைகள் உள்ளதால் காதலுக்கு இணை கடன் என கொள்ளலாம்..
Title: தோடும் யானையும் - சிலேடை 3
Post by: ஆதி on September 14, 2012, 06:20:15 PM
தோடும் யானையும் - சிலேடை

காதாடும் முத்துறும்க னங்குழை என்றுபடும்
சேதாரம் செய்யும்ஊ சிக்கடங்கும் - ஆகாரம்
தேடகடை ஏறும் குழியில் பிடிபடும்
தோடணியும் யானையும் நேர்

விளக்கம் :

காதாடும் - யானை தூங்கும் போதும் காதாடும் / தோடு காதிலாடும்

முத்துறும் - தந்தத்தில் முத்து இருக்கும் / முத்துக்கள் பதித்து இழைத்திருப்பர்

கனங்குழை என்றுபடும் - துதிகை கனமான குழைப்போல் இருக்கும் / கனங்குழை என்றும் தோடை அழைப்பர்

சேதாரம் செய்யும் - மதம் பிடித்தால் யாவையும் மோதி அழிக்கும் / கனங்குழை அணிவதால் காது தொங்கி போய் சேதாரமாகும்..

ஊசிக்கடங்கும் - அங்குசம் எனும் ஊசியால் மதத்தை அடக்குவர் / காது குற்றுதல்


ஆகாரம் தேட கடை ஏறும் - தம்முடைய ஆதாயத்துக்காக யானை பிச்சை எடுக்க வைப்பவரும் உண்டு / வறுமை காலத்தில் கடைக்கு அடகுக்கு போகும்

குழியில் பிடிபடும் - யானை குழிவெட்டி பிடிப்பர் / திருகாணி குழியில் திருகி தோடை அணிவர்..
Title: Re: தோடும் யானையும் - சிலேடை 3
Post by: Global Angel on September 14, 2012, 06:42:21 PM
நன்று கவிதைகள் எனக்கு ஒரு சந்தேகம் ... யானை தந்தங்களில் முத்து இருக்குமா ..
Title: Re: தோடும் யானையும் - சிலேடை 3
Post by: ஆதி on September 14, 2012, 11:45:18 PM
ஐம்பெருங்க காப்பியங்களில் யானையின் தந்தத்தில் முத்திருக்கும் என்று சொல்லியிருக்கின்றனங்க‌

அந்த தைரியத்தில் தான் எழுதினேன்
Title: Re: தோடும் யானையும் - சிலேடை 3
Post by: Global Angel on September 15, 2012, 04:04:03 AM
apdiyaa ... kelvipaddathillai .... moonkilil muththu irupathaai kelvi paddirukinren ... athu pola thanthathaal aana kanagi silambu onril pavalamum matronril muthum irunthathunu padichiruken ... aana thanthathukul iyarkayave muththu irukinrathenbathu sandegame .. :o
Title: Re: தோடும் யானையும் - சிலேடை 3
Post by: ஆதி on September 17, 2012, 06:09:18 PM
http://www.namadhunambikkai.com/2010/04/01/1119/

இந்த சுட்டியில் யானை தந்தத்தில் முத்து உருவாவதை பற்றி சொல்லிப்பட்டிருக்கு பாருங்களேன்

வைரமுத்துவின் ஒரு கவிதையில் அது இருக்கு, தமிழுக்கு நிறமுண்டு தொகுப்பு என்று நினைக்கிறேன்

இன்று தேடி சொல்கிறேன்
Title: பாம்பும் கடலும் - சிலேடை 4
Post by: ஆதி on September 17, 2012, 06:17:43 PM
பாம்பும் கடலும் - சிலேடை


ஊர்ந்தே அலைந்திடும் ஊரடித்து கொல்லும்,மண்
சார்ந்திருக்கும் சுற்றி படுத்திருக்கும் - கார்நிறமும்
உற்றிருக்கும் நச்சமுண்டாம் முற்றி யமணியும்
பெற்றெடுக்கும் பாம்புகடல் நேர்.
Title: Re: பாம்பும் கடலும் - சிலேடை 4
Post by: Global Angel on September 17, 2012, 07:49:00 PM


விலை மதிப்பற்ற மாணிக்க கல்லை கொடுக்கும் பாம்பும் .... விலை மதிப்பற்ற முத்துகளை கொடுக்கும் கடலும் ஒன்றென்று சொல்லி இருகின்றீர்கள் அப்டிதானே
Title: Re: தோடும் யானையும் - சிலேடை 3
Post by: Anu on September 18, 2012, 06:01:32 AM
ஐம்பெருங்க காப்பியங்களில் யானையின் தந்தத்தில் முத்திருக்கும் என்று சொல்லியிருக்கின்றனங்க‌

அந்த தைரியத்தில் தான் எழுதினேன்
naanum padichatha nenapu iruku..
yaanai thanthathula muthu irukunnu.
nalla oppeedu aadhi. nice kavithai :)