FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 06, 2011, 02:57:50 PM
-
புலால் உண்ட வாயால்
வள்ளலாரின் பெருமைகள்.
பன்னாட்டுத் தொடர்பினால்
பலகோடிப் பணஇருப்புகள்.
அன்று வியட்நாம்
"இன்றுபோய் நாளை
வராதே!" என்றது.
ட்ரூமனுக்குக் கற்பிக்க
ஜப்பான் மறந்ததை
வியட்நாம்
கற்றுக் கொடுத்துக்
கழற்றியது.
நேற்று ஈராக்.
வீரபாண்டியக் கட்டபொம்மன்
படத்துச் சிவாஜியாய்
விசாரணையின் பொழுது
சதாம் உசேன்.
இன்று ஈரான்.
இப்பொழுது
"என்னிடம் விளையாட்டு
வைத்துக் கொள்ளாதே!"
வெனிசுலா அதிபர்
ஹியூகொ சாவெஸ்
கண்டலிஸா ரைஸுக்கு
விழிப்பூட்டல்.
கழுகுக்கு வயது ஆனது.
வன்முறையில்தான்
ஆழ்ந்த நம்பிக்கை அதற்கு.
உதடுகளில் உலகக் காவலன்.
ஈசாப்பின் 'பூனைத் தவம்.'
லஃபோந்தேனின் அரிமா.
அதெல்லாம் இருக்கட்டும்.
'டாமிபுளூ' மருந்து
ஏராளமாயும்,
பறவைநோய்த் தடுப்பு மருந்து
இருபதுலட்சம் டோஸும்
பன்னாட்டு வல்லூறு ஒன்று
கடந்த மூன்றாம் மாதம்
வரவேற்று வாங்கப் பட்டதாமே.
கழுகு தன் குஞ்சுகளுக்கு
உணவூட்டட்டும்.
ஏனைய எந்தப்பறவையும்
உலகில் வாழலாகாது
என்று முடிவெடுப்பதற்கு
அதற்கோ
அதன் தூதுப் பருந்துக்கோ
அதிகாரத்தை
யார் கொடுத்தது?
-
nalla kavithi.... ;) vanmuraylargal erukum varai entha thesamum amaithiyodu vaalathu irayakikonre erukum :(