FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 28, 2012, 10:12:12 PM
-
நகரும் மணித்துளிகள்
நரகமாய் கனக்கிறது
உன்னை அழைக்க
ஒவொரு கணமும்
என் உயிர்வரை துடிக்கிறது
உணர்வுகள் தடுக்கிறது ..
கலைந்து போகும் மேகங்களே
என் காதலும் உங்களை போல்தானோ
தேவைக்கு மட்டும் கூடி பிரிகிறதே
தனிமையை தவிர்க்க
தத்தளிக்கிறேன் ...
உன் நினைவுச்சுழல்
என் உயிர் வரை உருவும் பொழுது ....