FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 06, 2011, 01:27:33 AM

Title: ஆணும் பெண்ணும்
Post by: thamilan on August 06, 2011, 01:27:33 AM
அயர்ந்த உறக்கத்தில்
இருக்கும் போது
ஆணின் விலாஎலும்பிலிருந்து
படைக்கப்பட்டவள் பெண்
பைபள் இப்படிதான் கூறுகிறது

களைத்த உடலுக்கு
உறக்கம் போல‌
ஆணுக்கு ஓய்வையும் சுகத்தையும்
புத்துணர்ச்சியையும் தருபவள்
பெண்

உறக்கத்தில் தோன்றுவது
கனவு
ஆணின் கனவாக இருப்பவளும்
பெண்ணே

ஆணின் எலும்பில் இருந்து
படைக்கப்பட்டவள் பெண்
ஆண் சதையாகவும்
ரத்தமாகவும் இருக்கிறான்
அவனை மனித உருவமாக்கும்
எலும்பாக இருப்பவள்
பெண்ணே

எலும்பு உடலுக்கு
உறுதியாக இருக்கிறது
ஆணுக்கு உறுதியாக‌
உறுதுனையாக இருப்பவள்
பெண்ணே

விலாஎலும்பு
இதயம் சுவாசப்பை இரைப்பை
இவற்றுக்கு கவசமாக இருக்கிறது
ஆணுக்கு கவசமாக இருப்பவளும்
பெண்ணே

வளைந்திருப்பது
விலாஎலும்பின் இலக்கணம்
அது தான்
உடலுக்கு அழகைத் தருகிறது
அதை நிமிர்த்த முயன்றால்
உடைந்து விடும்
பெண்ணும் அப்படி தான்

படைப்பின் சாரம்
ஆண்
ஆணின் சாரம்
பெண்
பரிமாண மரத்தின் கிளைகள்
ஆண்
அதில் சுவை தரும் கனிகள்
பெண்
Title: Re: ஆணும் பெண்ணும்
Post by: Global Angel on August 06, 2011, 05:27:47 PM
wowwwwwwwwwwwwwwwwwwww-- yow pasangala.. intha paartha pinpaachum namalukku mareyatha kodungada..loochungalaa ;D ;D ;D