FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 03, 2011, 07:28:07 AM
-
கானல் நீரை
அரைத்துக் கருகி கசிகிறது
டயரின் வாசம் குப்பென்று
அவசரமாய் போட்ட பிரேக்கை மீறி
ஒருவன்
மண்டை உடைந்தும்
இன்னொருவன்
வயிறு சிதைந்தும் உயிரிழந்தான்..
பீக்-அவர் டிராபிக் ஸ்தம்பித்த
சில நிமிடங்கள்
விபத்துக்குள்ளான வாகனங்கள் ஓரங்கட்டப்பட்டது
பிணங்கள் அப்புறப்படுத்தப்பட்டன
தார்ச் சாலையோடு உருகிய
இரண்டு ரத்தங்களை
தாகத்தோடு உறிஞ்சும்
வெயிலுக்கு போட்டியாக..
மேலும் டயர்கள்
மேலும் பல டயர்கள்
பச்சை விளக்கும் ஹாரன் ஒலியும்
கூடவே
மேலும் பல டயர்கள்..!
-
salaikalil vibaththu athikariththu vittathu....naam matum kavanamaga erukirom vibathai thavirthuvidalam enru enna koodathu... ethere vaaravanum kavanama erukka veendumillai enraa havirka mudiyathu naamum vibathukulavathu...
nalla kavithai ;)
-
நன்றி...!!!