FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on July 04, 2012, 01:56:54 PM

Title: வண்ணப்பிறைகள்
Post by: Anu on July 04, 2012, 01:56:54 PM
நினைவின் இமைகளில்
ஒவ்வொரு முறையும்
அமர்த்துகிறாய்
ஒரு துளி உற்சாகத்தை
அந்த முதல் சந்திப்பினைப்போலவே!

***

உதிர அணுக்களில்
வியர்வை உப்புக்களில்
முத்த ஈரத்தில்
கருவிழியின் வெளிச்சத்தில் …
இடையறக் கலந்திருக்கும்
இனிய மாயம் ஒருபோதும்
புரிவதேயில்லை…


***

என்னை நீயும்
உன்னை நானும்
அறியும் முன்னேயும்
கடந்து போயிருக்கின்றன
எத்தனையோ பிறைகள்…

என்னை நீயும்
உன்னை நானும்
அறிந்த பின்னும்
கடந்து போகின்றன
எத்தனையோ பிறைகள்
வண்ணங்களைத் தூவியபடி
Title: Re: வண்ணப்பிறைகள்
Post by: ஸ்ருதி on July 06, 2012, 07:20:48 AM

என்னை நீயும்
உன்னை நானும்
அறிந்த பின்னும்
கடந்து போகின்றன
எத்தனையோ பிறைகள்
வண்ணங்களைத் தூவியபடி

அருமை

வரிகளில் அழகு மிளிர்கின்றது