FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 01, 2011, 06:38:30 AM

Title: முறிந்த கிளையின் ஒடியும் சப்தம்..!!!
Post by: Yousuf on August 01, 2011, 06:38:30 AM
திருப்பித் தர வலிமையற்ற
ஒருவனின் -
கடன் கேட்கும் தொனி..
தனக்குத் தானே பாடும்
இரங்கற்பா போன்றது..!

தன் வறுமையைக் கூற..
வார்த்தையின்றி அவன்
கூனிக் குறுகி..
”குறுந்தகவல்” அனுப்பக் கூடும்..!

பார்த்து விட்டு..
பார்க்காதது போல
பாவனை செய்யும்..
உறவுகள் -
முறிந்த கிளையின்
ஒடியும் சப்தம்..
வேர் வரையும் உலுக்கக் கூடும்..!

வளர்த்தவனின் சூதை..
அறுக்கும்போது மட்டுமே
அறிய நேர்ந்த
ஆட்டுக்குட்டியின்
துயரை
குரல்வளையில் இருந்து கொப்பளிக்கும்
குருதிகள் பேசக் கூடும்..!

வாயில்லா ஜீவன்களைப் போல
வறியவர்கள்...!

இருப்பவனின் செல்வத்தில்
இல்லாதவனின் இரத்தமும்
வியர்வையும்
காய்ந்து கிடப்பதை
கண்ணீர்த் துளிகள் மட்டுமே
காணக் கூடும்..!
Title: Re: முறிந்த கிளையின் ஒடியும் சப்தம்..!!!
Post by: Global Angel on August 01, 2011, 02:11:53 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Fbravo.gif&hash=b56b4e049c3974b9417496231c29152a35c3b6bf)arumayana kavithai varumayin niram sivappuu :(
Title: Re: முறிந்த கிளையின் ஒடியும் சப்தம்..!!!
Post by: Yousuf on August 01, 2011, 02:28:59 PM
பாராட்டுவது பெரிதல்ல வறுமையில் வாடுவோருக்கு உதவ வேண்டும்...!!!

குறிப்பாக உறவினர்களுக்கு உதவுவது சிறப்பு...!!!

Title: Re: முறிந்த கிளையின் ஒடியும் சப்தம்..!!!
Post by: Global Angel on August 01, 2011, 02:50:40 PM
sure ;)
Title: Re: முறிந்த கிளையின் ஒடியும் சப்தம்..!!!
Post by: Yousuf on August 01, 2011, 02:54:48 PM
நன்றி...!!! :) :) :)