FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 01, 2011, 06:35:52 AM
-
முதுமையில்
நோயின் துயரில்
மரணிக்க நேரும்
என் உடலை அச்சுறுத்துகிறாய்!
விஷம் தோய்ந்த
உன் வாள்களால்
சல்லடையாய் துளைக்க
காத்திருக்கும்
உன் துப்பாக்கிகளால்
சித்ரவதைகளால்
ஒரு வீரனை
கொன்று விட முடியாது!
மண்ணில் சாயும் என் உடல்
நிலத்திற்கு
இரத்த தானம் செய்யக்கூடும்.!
சிதைக்கப்பட்ட என் உடலில்
உன் ஆதிக்கத்தின்
கொடுங்கைளால்
வரலாற்றைத் திரிக்கிறாய்!
நெஞ்சுக்கு நேர் நின்று
எதையும் எதிர்கொள்ளாத
உன் கோழைத்தனம்
என்னை-
மண்டியிடச் சொல்கிறது!
படைத்தவனுக்கு மட்டுமே
தலைசாய்த்து
பழக்கப்பட்ட நான்
உன்னை வணங்க மாட்டேன்!
என் நிலத்தை அபகரிக்க நீளும்
உன் களவுக் கைகளை
வெட்டுவேன்!
ஆனாலும் நான்
வன்முறையாளனாக மாட்டேன்!
எதிரிகளின் கைகளால்
நிகழும் மரணம்
துரோகத்தின் அழுக்கை
குருதியால் கழுவி
வரலாற்றை சுத்தப்படுத்துகிறது!
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Fbravo.gif&hash=b56b4e049c3974b9417496231c29152a35c3b6bf)nalla pathivu vanmaurai matume theervaagaathu.. ;)
-
நன்றி...!!!