FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on June 05, 2012, 01:39:43 PM

Title: காணாமல் காணும் ஓவியம்
Post by: Anu on June 05, 2012, 01:39:43 PM


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1025.photobucket.com%2Falbums%2Fy313%2Froserose73%2Feye.jpg&hash=f1a4a40fe7422ab91c553ec5f33ed48582c5d03a)

எதிர்திசையில் அமர்ந்து
ஏதோ ஓவியம் வரையத்
துவங்கினாள் அந்தச் சிறுமி
என்பார்வையில் படாதபடி

என் பார்வைப் பசிக்கு
அவள் கண்களின் அசைவு
மட்டுமே தீனியாகிக்கொண்டிருந்தது

சிறுபூவின் கருவிழிகள்…
எதிர் திசைகளில் நகரும் போது
குறுக்கு நெடுக்குக் கோடுகளையும்…

வளைந்து சுழலும் போது
வட்டத்தையும் வளைகோடுகளையும்

இடவலமாய்த் தாவும் போது
வேண்டாததை அழிப்பதையும்

மினுமினுக்கும் போது
பட்டாம் பூச்சிகளையும்…

பூவாய்ச் சிரிக்கும் போது
குழந்தையின் புன்னகையும்

களைத்துச் சோர்வுறும் போது
ஏதோ ஏக்க வயிற்றையும்

வண்ணங்களைக் கசியவிடும்போது
வானவில்லையும்
......எனக்குள் வரைந்து முடித்திருந்தது.

”வரைஞ்சு முடிச்சாச்சு
வந்து பாருங்க” என அழைத்தாள்

”பார்த்துட்டேன்” என்ற என் பதிலுக்கு
ஆச்சரியத்தில் திறந்த அவளின் கண்கள்
அடுத்த ஓவியத்தை தீட்ட ஆரம்பித்தது.



எழுதியது ஈரோடு கதிர்
Title: Re: காணாமல் காணும் ஓவியம்
Post by: ஸ்ருதி on June 06, 2012, 07:38:53 AM
wow niceeeeeeeeeeee one...and nice picture anuma  :-* :-*
Title: Re: காணாமல் காணும் ஓவியம்
Post by: Anu on June 06, 2012, 09:38:20 AM
wow niceeeeeeeeeeee one...and nice picture anuma  :-* :-*
nandri cuty  :-*