FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on June 04, 2012, 02:15:04 PM

Title: இப்படிக்கு..
Post by: Anu on June 04, 2012, 02:15:04 PM
நாவிலிருந்தோ
நரம்புவழி கடந்து
விரல் நுனி வழியோ
வெளியேறும்
எல்லா வார்த்தைகளும்…

எவரெவரோ உருவாக்கி
எவரெவரோ பயன்படுத்தி
அழகுபடுத்தியும்
எச்சில்படுத்தியும்
எறியப்பட்டவைகளே!

எழுத்தும் வார்த்தையும்
என்னாலும் உங்களாலும்
உருவாக்கப்படவில்லை
இருந்தும்…
அடியில் பதிக்கிறோம்
அவரவர் பெயரை அழகாக!
Title: Re: இப்படிக்கு..
Post by: Yousuf on June 04, 2012, 05:26:05 PM
Quote
எழுத்தும் வார்த்தையும்
என்னாலும் உங்களாலும்
உருவாக்கப்படவில்லை
இருந்தும்…
அடியில் பதிக்கிறோம்
அவரவர் பெயரை அழகாக!

உண்மைதான் அணு அக்கா நிதர்சனமான உண்மையை அழகாக கவிதை வடிவில் கொடுத்துள்ளீர்கள்!

நல்ல கவிதை!
Title: Re: இப்படிக்கு..
Post by: Anu on June 06, 2012, 09:51:21 AM
tnks yousuf ..
Title: Re: இப்படிக்கு..
Post by: aasaiajiith on June 06, 2012, 10:17:52 AM

எவர் எழுத்துக்களும் ,வார்த்தைகளும்
சுயமாய் உருவாக்கபடுகிறதோ   இல்லையோ ?
என் வார்த்தைகள் ,எழுத்துக்கள், மட்டுமன்றி
அவை தோன்ற தேவைப்படும் எண்ணங்கள்
என்னால் மட்டுமே உருவாக்கபடுகின்றன
என்பதை அறுதியிட்டு உறுதியாக கூறுகிறேன் ! 

எழுத்து & எண்ணம்
    ஆசை அஜீத்
 
Title: Re: இப்படிக்கு..
Post by: பவித்ரா on June 06, 2012, 04:59:04 PM
உண்மைய அழகா சொல்லி இருகிங்க நல்ல இருக்கு அனுமா
Title: Re: இப்படிக்கு..
Post by: Dharshini on June 08, 2012, 01:48:17 AM
migavum nala varigal anuma
Title: Re: இப்படிக்கு..
Post by: ஸ்ருதி on June 09, 2012, 07:26:29 AM
நாவிலிருந்தோ
நரம்புவழி கடந்து
விரல் நுனி வழியோ
வெளியேறும்
எல்லா வார்த்தைகளும்…

எவரெவரோ உருவாக்கி
எவரெவரோ பயன்படுத்தி
அழகுபடுத்தியும்
எச்சில்படுத்தியும்
எறியப்பட்டவைகளே


அனுமா,

வார்த்தைகள் வலிமையானவை
ஒரு முறை வெளியேறிவிட்டால்
மீண்டும் திரும்ப பெறுவது கடினம்
இதை ஏனோ அறியாத சிலர் வார்த்தைகளை கொட்டிவிட்டு
பிறகு அவஸ்தை படுகிறார்கள்
Title: Re: இப்படிக்கு..
Post by: aasaiajiith on June 09, 2012, 08:00:10 AM
VAARTHAIGALAI PATTRI NEE VAZHANGIYA VARIGALIL
MUDHALIL NEE UDAN PADUGINDRAAYAA ??? ANU ?

VELIPPADUTHTHUM VAARTHAIGAL ENBADHU VELIPADUM KAALAM, NERAM
SOOZHAL,MARUPURAM IRUPPAVARIN ENNAM IVAIGALAI ADIPPADAIYAAI KONDADHEY THAVIRA THITTAMITTO, KATTAMITTO,VATTAMITTO, KOTTAPATTAVAI PADUBAVA ALLA. ALLAVAA ???

VAARTHAIGAL ENDRU ILLAI SELIAVIDA PATTA EDHAIYUM THIRUBHA PERUVADHU SATHTHIYAMAAI SAATHIYAMEY ANBAAL !

(( pakkam pakkamaa thaththuva Tsunaamiyaiyum,arivurai Sooraavaliyaiyum Edhir niakki dhaan indha padhippu)) Nallaa neraiya perukku thevai padta adhdhiyaavasiya arivuraigal ellaam anu un anubhavam kodu nee solvadhai aaamodhiththu Varaverkindren.

  வார்த்தைகளை   பற்றி  நீ  வழங்கிய  வரிகளில் 
முதலில்  நீ  உடன்  படுகின்றாயா   அணு  ?

வெளிப்படுத்தும்  வார்த்தைகள்  என்பது  வெளிப்படும்  காலம் , நேரம்
சூழல் ,மறுபுறம்  இருப்பவரின்  எண்ணம்  இவைகளை  அடிப்படையாய்  கொண்டதே  தவிர  திட்டமிட்டோ , கட்டமிட்டோ ,வட்டமிட்டோ , கொட்டபட்டவை    அல்ல . அல்லவா 

வார்த்தைகள்  என்று  இல்லை  செலிவிட  பட்ட  எதையும்  திரும்ப  பெறுவது  சத்தியமாய்  சாத்தியமே  அன்பால்  !

(( பக்கம்  பக்கமா  தத்துவ  சுனாமியையும் ,அறிவுரை  சூறாவளியையும்  எதிர்  நோக்கி  தான்  இந்த  பதிப்பு ))
நல்லா நெறைய  பேருக்கு  தேவை  பட்ட  அத்தியாவசிய  அறிவுரைகள்  எல்லாம்  அணு  உன்  அனுபவம்  கொண்டு  நீ  சொல்வதை  ஆமோதித்து   வரவேற்கின்றேன் .
Title: Re: இப்படிக்கு..
Post by: vimal on June 09, 2012, 09:09:19 AM
anu nice kavithai , simply super
Title: Re: இப்படிக்கு..
Post by: Anu on June 09, 2012, 07:20:41 PM

எவர் எழுத்துக்களும் ,வார்த்தைகளும்
சுயமாய் உருவாக்கபடுகிறதோ   இல்லையோ ?
என் வார்த்தைகள் ,எழுத்துக்கள், மட்டுமன்றி
அவை தோன்ற தேவைப்படும் எண்ணங்கள்
என்னால் மட்டுமே உருவாக்கபடுகின்றன
என்பதை அறுதியிட்டு உறுதியாக கூறுகிறேன் ! 

எழுத்து & எண்ணம்
    ஆசை அஜீத்


haha . already kandu pidicha vaarthaigalai thaan ninga use seiringa.
unga ennangal ungalodadhunnu naan agree seiren (F)
nalla thinking ajith (F)
Title: Re: இப்படிக்கு..
Post by: Anu on June 09, 2012, 07:25:52 PM
உண்மைய அழகா சொல்லி இருகிங்க நல்ல இருக்கு அனுமா
nandri dear (L)
Title: Re: இப்படிக்கு..
Post by: Anu on June 09, 2012, 07:27:35 PM
ella paaraatugalum ezhudiyavarku sendru seratum (F)(F)
tnks  for your appreciation cuty (L) ajith (F) vimal (F) dharshu ma (L)