FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on June 01, 2012, 12:19:38 PM
-
அந்தோ!!
அவள் எனக்கு
பதில் கடிதம் எழுதாமல்
இருந்திருந்தால் நான் இறந்திருப்பேன்.
எழுதியதால் இறந்தது தமிழ்!
*********************
ஆளுமை
பொறியை கொண்டு எலியை
ஆளுமை செய்ததது போய்,
எலியை கொண்டு (கணிப்)பொறியை
ஆளுமை செய்கிறோம்.
****************************
கையெழுத்து
தினமும் செதுக்கும் ஒரே சிற்பம்.
*******************************
திரைப்பட வெளியீடு
நிழலைக்காண
நிஜங்கள் ஏங்கி நிற்கின்றன.
****************************
தாய் வீடு
பிறந்து வளர்ந்த வீட்டிற்கே
விருந்தாளியாய் சென்றாள்.
உரிமையிழந்தவளாய்!
**********************
சகுனம்
வீட்டில் இருந்து புறப்பட்டேன்.
குறுக்கே செல்லவிருந்த பூனை
நின்றுவிட்டது.
இடையுறாத பயணத்தை நினைந்து
மகிழ்ந்தேன்.
ஆனால்... பூனை ஏன் நின்றது?
சகுனம் பார்த்திருக்குமோ?
******************************
பரிசு
ஒவ்வொரு தந்தையும்
தன் மகனுக்கு தரும்
முதல் பரிசு -
முத்தம்
*****************************
தாய்
நான் சாப்பிட்டேன்
நீ சாப்பிடு...
என்று ஊட்டிய தாய்
பாசத்தைக் கற்பித்தாள்
பொய்யையும்தான்
-
தாய்
நான் சாப்பிட்டேன்
நீ சாப்பிடு...
என்று ஊட்டிய தாய்
பாசத்தைக் கற்பித்தாள்
பொய்யையும்தான்
அந்த பொய்கள் எல்லாம் நம்மை பொய்மையலனாய் மாற்றுவதில்லைதனே அனுமா
poikum unmaikumaana vetrumai ya katthu kudukuthu rose dear :)
nandri cuty <3
-
தாய்
நான் சாப்பிட்டேன்
நீ சாப்பிடு...
என்று ஊட்டிய தாய்
பாசத்தைக் கற்பித்தாள்
பொய்யையும்தான்
superrrrrrrrrrr