FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on June 01, 2012, 12:19:38 PM

Title: அந்தோ!!
Post by: Anu on June 01, 2012, 12:19:38 PM

அந்தோ!!

அவள் எனக்கு
பதில் கடிதம் எழுதாமல்
இருந்திருந்தால் நான் இறந்திருப்பேன்.
எழுதியதால் இறந்தது தமிழ்!

*********************
ஆளுமை

பொறியை கொண்டு எலியை
ஆளுமை செய்ததது போய்,
எலியை கொண்டு (கணிப்)பொறியை
ஆளுமை செய்கிறோம்.

****************************

கையெழுத்து

தினமும் செதுக்கும் ஒரே சிற்பம்.

*******************************


திரைப்பட வெளியீடு
 
நிழலைக்காண
நிஜங்கள் ஏங்கி நிற்கின்றன.

****************************

தாய் வீடு

பிறந்து வளர்ந்த வீட்டிற்கே
விருந்தாளியாய் சென்றாள்.
உரிமையிழந்தவளாய்!

**********************

சகுனம்

வீட்டில் இருந்து புறப்பட்டேன்.
குறுக்கே செல்லவிருந்த பூனை
நின்றுவிட்டது.
இடையுறாத பயணத்தை நினைந்து
மகிழ்ந்தேன்.
ஆனால்... பூனை ஏன் நின்றது?
சகுனம் பார்த்திருக்குமோ?

******************************

பரிசு

ஒவ்வொரு தந்தையும்
தன் மகனுக்கு தரும்
முதல் பரிசு -
முத்தம்

*****************************

தாய்

நான் சாப்பிட்டேன்
நீ சாப்பிடு...

என்று ஊட்டிய தாய்
பாசத்தைக் கற்பித்தாள்
பொய்யையும்தான்
Title: Re: அந்தோ!!
Post by: Global Angel on June 01, 2012, 08:10:12 PM
Quote
தாய்

நான் சாப்பிட்டேன்
நீ சாப்பிடு...

என்று ஊட்டிய தாய்
பாசத்தைக் கற்பித்தாள்
பொய்யையும்தான்


அந்த பொய்கள் எல்லாம் நம்மை பொய்மையலனாய் மாற்றுவதில்லைதனே அனுமா

poikum unmaikumaana vetrumai ya katthu kudukuthu rose dear :)
nandri cuty <3
Title: Re: அந்தோ!!
Post by: ஸ்ருதி on June 03, 2012, 10:06:49 AM
தாய்

நான் சாப்பிட்டேன்
நீ சாப்பிடு...

என்று ஊட்டிய தாய்
பாசத்தைக் கற்பித்தாள்
பொய்யையும்தான்

superrrrrrrrrrr