FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 11:27:09 AM
-
என் விரல்கள்
உன் பெயரை எழுத மறந்தால்
என் கைகளை
நானே துண்டித்துவிடுவேன்
என் நடைகள்
உன் பாதை நடக்க மறந்தால்
என் கால்களை
நானே முறித்துவிடுவேன்
என் விழிகள்
உன் முகம் காண மறந்தால்
என் இமைகளை
நானே எரித்துவிடுவேன்
என் நினைவு
உன்னை நினைக்க மறந்தால்
என் நினைவை
நானே அழித்துவிடுவேன்
என் இதயம்
உன்னில் துடிக்க மறந்தால்
என் துடிப்பை
நானே தடுத்துவிடுவேன்
என் உயிர்
உன்னை தேட மறந்தால்
நான் சுவசிப்பதையே நிறுத்திவிடுவேன்