FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Tamil NenjaN on May 31, 2012, 03:05:59 PM

Title: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: Tamil NenjaN on May 31, 2012, 03:05:59 PM
கூட்டத்திலிருந்து விடுபட்ட
ஒற்றைப் பறவையாய்
தனித்துப் போனது மனது

ஆழ்கிணற்றில் எறியப்பட்ட
பாறாங்கற்களாய்....
மனதிற்குள் சதாவும்
வலியின் வேதனைகள்

நூலறுந்த பட்டமாகிப் போன
வாழ்வின் இலட்சியங்கள்....
எரிபொருள் தீர்ந்த விமானமாய்
சடாரென்று தொலைந்த நிம்மதிகள்

எதிர்காலம் கனவானது எனக்கு
நிகழ்காலமோ இருளாகிப் போனது
இறந்த காலம்
இனியொரு தரம் வராதாவென
மனமோ ஏங்குது

விண்ணைத் தொடும் உயரம்
எழுந்து நின்றதென் வாழ்க்கை
அன்றொரு நாள்
பூகம்பத்தில் புதையுண்ட பூமியாய்
இடிந்து போனது இன்றைய பொழுது

முகவரியே இல்லையெனக்கு
ஆறுதல் மடல்கள் வருவதற்கும்
இப்போது
கொஞ்சமும் ஈரமில்லா
நெஞ்சம் கொண்டவர்களை
எதிர்பார்த்ததும் என் தப்புதான்

வீழ்ந்துவிட்டதாய்
மிதித்துப் பார்க்க நினைக்கும்
நண்பர்களே...

தோல்விகள் எனக்குப் புதிதல்ல
எவரஸ்டையும் தாண்டி
மீண்டும் எழுவேன்
ஏழுகடல் ஆழம் தாண்டி
புதைக்கப்பட்டாலும்
எழுந்து வருவேன்

இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..

Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: aasaiajiith on May 31, 2012, 03:49:14 PM
அற்புதமான  துவக்க  பதிப்பு  !

தொடர்ந்து  பதியுங்கள்  !!!

இனி  வரும்  பதிப்புக்கள்  மகிழ்ச்சியினை , வெற்றியினை  சுமந்து  வர  வாழ்த்துக்கள்  !!!!
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: கார்க்கி on May 31, 2012, 04:05:51 PM
வாவ் வாவ் வாவ் அருமையான கவிதை தோழரே..

Quote
ஆழ்கிணற்றில் எறியப்பட்ட
பாறாங்கற்களாய்....
மனதிற்குள் சதாவும்
வலியின் வேதனைகள்
அருமையான வரிகள்

Quote
முகவரியே இல்லையெனக்கு
ஆறுதல் மடல்கள் வருவதற்கும்
இப்போது
கொஞ்சமும் ஈரமில்லா
நெஞ்சம் கொண்டவர்களை
எதிர்பார்த்ததும் என் தப்புதான்
வலிகள் வலிகள்

Quote
இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..
வாவ் சிறந்த வரிகள்

மிகவும் பிடிச்சிருக்கு .. கவிதை பயணம் தொடர வாழ்த்துக்கள்
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: kanmani on May 31, 2012, 04:23:32 PM
vanakkam tamil nenjan unga muthal pathipae  arumaiyaaga ulladhu

தோல்விகள் எனக்குப் புதிதல்ல
எவரஸ்டையும் தாண்டி
மீண்டும் எழுவேன்
ஏழுகடல் ஆழம் தாண்டி
புதைக்கப்பட்டாலும்
எழுந்து வருவேன்

இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..



tamil nenjan ungalin varigal migavum arumai .. ungalin pathipugal thodara vendugiren...
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: supernatural on May 31, 2012, 09:02:39 PM
எதிர்காலம் கனவானது எனக்கு
நிகழ்காலமோ இருளாகிப் போனது
இறந்த காலம்
இனியொரு தரம் வராதாவென
மனமோ ஏங்குது


kadantha kaalaththil vasanthamaana nenaivugalai....nenainthu endrumey manam engum....


தோல்விகள் எனக்குப் புதிதல்ல
எவரஸ்டையும் தாண்டி
மீண்டும் எழுவேன்
ஏழுகடல் ஆழம் தாண்டி
புதைக்கப்பட்டாலும்
எழுந்து வருவேன்

இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..


vaazkaiyin atthanai tholvigalaium..valigalaium ethirkondu vaza kattrukkolla vendum ..atharku manathai thayaraakkavum vendum...

nalla kavithai...
payanam thodara vaazththukkal...
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: Tamil NenjaN on June 01, 2012, 12:33:57 AM
ARPUDHAMAANA THUVAKKA PADHIPPU !

THODARNDHU PADHIYUNGALLL !!!

INI VARUM PADHIPPUKKALL MAGIZHCHIYINAI, VETRIYINAI SUMANDHU VARA VAAZHTHUKKALLL !!!!

நன்றி நண்பர் அஜீத் அவர்களே..என் கவிதைக்கான முதல் வாழ்த்து உங்களுடையது..மனமார்ந்த நன்றிகள்...
உங்கள் ஆதரவையும் விமர்சனங்களையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: Tamil NenjaN on June 01, 2012, 12:35:46 AM
நண்பர் கார்த்தி.உங்கள் கருத்து ஊக்கமளிக்கின்றது..என் கவிதைப் பயணம் தொடர தொடர்ந்தும் ஆதரவு தருவீர்கள் என்று
எதிர்பார்க்கின்றேன்..

நன்றி நண்பரே
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: Tamil NenjaN on June 01, 2012, 12:37:37 AM
கண்மணி...

இந்த தளத்தில் என் கவிதை பதியப்பட நீங்கள் தான் ஆரம்பம் தொட்டு ஆதரவு தந்தீர்கள்..இந்தப் பயணம் தொடரவும் உங்கள்
ஆதரவை எதிர்பார்க்கின்றேன்..

என்றென்றும் நன்றிகள் தோழி
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: Tamil NenjaN on June 01, 2012, 12:38:47 AM
நன்றி Supernatural...உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: Anu on June 01, 2012, 10:29:51 AM
கூட்டத்திலிருந்து விடுபட்ட
ஒற்றைப் பறவையாய்
தனித்துப் போனது மனது

எதிர்காலம் கனவானது எனக்கு
நிகழ்காலமோ இருளாகிப் போனது
இறந்த காலம்
இனியொரு தரம் வராதாவென
மனமோ ஏங்குது

தோல்விகள் எனக்குப் புதிதல்ல
எவரஸ்டையும் தாண்டி
மீண்டும் எழுவேன்
ஏழுகடல் ஆழம் தாண்டி
புதைக்கப்பட்டாலும்
எழுந்து வருவேன்

இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..

miga arumaiyaana kavidhai thamil nenjan.
manadhin vali nalla puriyudhu.
nanbargalai nambi emaandu irukiravangaloda mana kumurala azahga solli irukinga..
Yaar yaaro nanban endru emaandha nenjam ondru..
unga kavidhai padikum podhu indha varigal thaan nenapuku varudhu.
enga expectation iruko angha emaatram irukum..
future is mystery , eppa vena ennavena nadakalaam.
nambikaiyoda irungha ellaame nallathaa nadakum...




 

Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: MysteRy on June 01, 2012, 10:32:16 AM
future is mystery

 :o :o :o :o :o :o :o :o
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: Global Angel on June 01, 2012, 08:41:18 PM
Quote
இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..




நல்ல நட்பென்றால் துரோகம் அறியாது ....

 நல்ல கவிதை தொடரட்டும் உங்கள் படைப்புகள்
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: ஸ்ருதி on June 01, 2012, 09:29:28 PM
இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்..

நட்பில் துரோகம்
தீராத துயரம்
நன்றிகள்
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: vimal on June 02, 2012, 08:17:02 PM
nanba arumayana kavidhai thangal kavipayanathil karai thenpadakudadhu
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: Tamil NenjaN on June 04, 2012, 06:07:15 PM
பாராட்டுக்கள் தந்து ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமொன்றை தந்துள்ளது.
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: !~Bharathy~! on June 04, 2012, 08:53:33 PM
"எதிர்காலம் கனவானது எனக்கு
நிகழ்காலமோ இருளாகிப் போனது
இறந்த காலம்
இனியொரு தரம் வராதாவென
மனமோ ஏங்குது"


"இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்.."
[/color]

தமிழ்நெஞ்சன்,  இவ்வரிகளை விமர்சிக்க நான் கற்ற தமிழ் போதாது என்றே சொல்வேன்.எனினும் வாழ்த்துக்கிறேன்.!!! தொடர்ந்தும் இப்படியான எழுச்சி கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...  
 
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: Tamil NenjaN on June 04, 2012, 09:55:13 PM
நன்றி பாரதி,,,என் எழுத்து தொடர உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்..
Title: Re: தோல்வியிலும் துவளாது என்மனம்
Post by: Global Angel on June 16, 2012, 03:40:56 AM
Quote
"எதிர்காலம் கனவானது எனக்கு
நிகழ்காலமோ இருளாகிப் போனது
இறந்த காலம்
இனியொரு தரம் வராதாவென
மனமோ ஏங்குது"

"இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்.."[/color]

தமிழ்நெஞ்சன்,  இவ்வரிகளை விமர்சிக்க நான் கற்ற தமிழ் போதாது என்றே சொல்வேன்.எனினும் வாழ்த்துக்கிறேன்.!!! தொடர்ந்தும் இப்படியான
எழுச்சி கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...



me to  :)