FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 28, 2012, 05:22:29 PM
-
நான் இல்லா பொழுதுகளில்
நீ எப்படி உணர்ந்தாய்?
என்னவெல்லாம் உணர்ந்தாய் ??
என ஒரு சிறு கேள்வி எனை கேட்டால் .
வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு ரீதியில்
வெவ்வேறு விதமான நிலைகளின் நிலைபாட்டை
விளக்கமாய் விளக்குவேன் !
நீ நீங்கிய நேரங்களில் என் நிலைகள்
மருத்துவ ரீதியில் சொல்வதானால்
சுயநினைவே இல்லாதிருந்தேன் !
ஆன்மீக ரீதியில் சொல்வதானால்
சபிக்கபட்டிருந்தேன் !
பொருளாதார ரீதியில் சொல்வதானால்
திவாலாகி இருந்தேன் !
அரசியல் ரீதியில் சொல்வதானால்
அதிரடியாய் பதவிநீக்கம் செய்யபட்டிருந்தேன் !
அலுவலக ரீதியில் சொல்வதானால்
தற்காலிக பணிநீக்கம் செய்யபட்டிருந்தேன் !
கவித்துவ ரீதியில் சொல்வதானால்
கற்பனைத்திறன் களவாடபட்டிருந்தேன் !
ஓர் மாவட்டத்தின் ஆட்சியாளர் ரீதியில் சொல்வதானால்
பிணை கைதியாய் கடத்தபட்டிருந்தேன் !
சென்னைவாசியின் ரீதியில் சொல்வதானால்
200 *c பாகை செல்சியஸ் வெப்பத்தினை அனுபவித்திருந்தேன்
உன் இதயம் கவர்ந்தவன் எனும் ரீதியில் சொல்வதானால்
இதயத்துடிப்பையே நிறுத்தி வைத்திருந்தேன் !
இதயமானவளே ! உனக்காக !
-
கவித்துவ ரீதியில் சொல்வதானால்
கற்பனைத்திறன் களவாடபட்டிருந்தேன்
பிரிவின் கொடுமையை எளிமையாய் ...அதே சமயம்
இனிமை சற்றும் குறியாமல்..
அருமையாய் உரைக்கும் வரிகள்..
உன் இதயம் கவர்ந்தவன் எனும் ரீதியில் சொல்வதானால்
இதயத்துடிப்பையே நிறுத்தி வைத்திருந்தேன் !
அன்பின் புனிதம்...
காதலின் உன்னதம்...
நேசத்தின் உச்சம்...
உச்சத்தின் உச்சத்தில் இவ்வரிகள்....
-
நண்பா உன் கவிதை வரிகள் அனைத்தும்
என் இதயத்தை இதமாய் வருடுகின்றன
இந்த கவிதையை நான் வாசித்த போது
உணர்ந்தேன் சுயநினைவு ,சபிக்கப்படுதல்
திவால் ,பதவிநீக்கம் ,பணிநீக்கம்
கற்பனைத்திறன் களவாடப்படுதல்,
பிணைக்கைதி ,200*c வெப்பம்
இதயத்துடிப்பு நிறுத்தம்
ஆனால் என் இனியவளுக்ககவா
அல்லது உன் கவிதைக்காகவா என்று
தெரியவில்லை !!!
nanba un kavithayil valiyayum valimayayum valiyura koori irukirirgal