அம்மா
அன்னை என்றொரு ஆலயம்
அங்கே அன்பு மட்டுமே ஜீவனம் .
காணிக்கை கேட்க்காத கடவுள் அவள்
காணியில் காணக்கிடைக்கும் அவளின் அருள் .
பத்து திங்கள் கருவிருந்தேன்
அவள் பளிங்கு முகத்தினை கண்டிடவே !
என்ன தவம் செய்திருந்தேன்
தாயாய் இவளை கொண்டிடவே !
பாசம் புரளும் வங்கி அவள்
வட்டி வசமின்றி முழுதும் தந்திடுவாள் .
பத்து பிள்ளை பெற்றாலும் முத்தம்
பாங்காய் பகிர்ந்து தந்திடுவாள் .
எத்தனை பிறவி கொண்டாலும்
உன் மகனாய் வாழும் வரம்வேண்டும் .
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi666.photobucket.com%2Falbums%2Fvv29%2Fko%3Cbr+%2F%3Ebnon%2Fmotherday.jpg&hash=a5e686eb87f767a44bd20408b663c36f779da74c)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi777.photobucket.com%2Falbums%2Fyy57%2FFr%3Cbr+%2F%3Eeethey%2Ft201hccrx5m.jpg&hash=4abc474298b38095b48858a8f73d6c33a831f6c7)
அன்பின் அவதாரம் அம்மா !
பத்து மாதம் என்னை வயிற்றில்
சுமையென நினைக்காமல் சுகமாக நினைத்து
மரண வேதனையில் பெற்று எடுத்தாயே-அம்மா !
உடல் வலுவையும் இழந்து ரத்தத்தையும் பாலாக
கொடுத்து வளர்த்தாயே- அம்மா !
இரவு பகலாக நீ தூங்காமல்
கண்விழித்தாயே -அம்மா !
எந்தன் அழுகுரல் கேட்டதும்
துடித்தாயே-அம்மா !
என்னை உன் மார்போடு
சேர்த்து சீராட்டினாயே -அம்மா !
எவ்வளவு கஷ்டம் வந்தபோதும்
என் சிரிப்பு சத்தம் கேட்டதும்
உந்தன் கவலை மறந்து
புன்னகை புரிவாயே -அம்மா !
முதல் வருடத்திலே
கல்வி சொல்லி தந்து
நடக்க பழகி தந்து
சந்தோசம் அடைவாயே-அம்மா
ஐந்து வயதில் பள்ளிக்கு அனுப்ப
உந்தன் வியர்வை சிந்தி
உழைத்து பள்ளிக்கு அனுப்பி
அழகு பார்த்தாயே -அம்மா !
படிப்பு முடிந்த வந்து அம்மா என்று கூப்பிட்டதும்
ஓடி வந்து பாசத்தில்
மார்போடு கட்டி அணைத்து
முத்தம் தந்து அழகு பார்த்தாயே -அம்மா
சோர்வாகி நான் தேடும்
தலையணை உன் மடி..
என்னை தூங்கவைத்து-
பின் தூங்கி முன் எழுவாயே-அம்மா
மகிழ்ச்சியை மட்டுமே எனதாக்கி
செல்வம் இல்லாத போதும்
செல்லமாக வளர்த்து
என் வாழ்வின் இறுதி வரை வருவாய் என
நினைத்திருக்கும் வேளையில்
ஏழு வருடம் என்னோடு இருந்தது
போதும் என்று எண்ணி தான்
என்னை இவுலகில் தனியாக தவிக்க விட்டு சென்றாயோ..
கடைசியாக என்னைவிட்டு பிரியும்
தருவாயில் கூட
"நல்லா இருக்கியா செல்லம்" என கொஞ்சியது
நீங்காத நினைவாய் என்னுள்