FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on May 05, 2012, 06:38:27 PM

Title: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
Post by: ஸ்ருதி on May 05, 2012, 06:38:27 PM
(https://m.ak.fbcdn.net/a5.sphotos.ak/hphotos-ak-prn1/545936_221938664576387_1253034468_n.jpg)

"சாணக்ய சந்திரகுப்தா": N.T.ராமராவ் நிறுவனத்துக்கு நாகேஷ்வர ராவ் நடித்த முதல் படம்.இந்த படத்தை இயக்கியவர் N.T.ராமராவ்,முதலில் ராமா ராவ் சாணக்ய ரோலில் நடிக்க நினைத்து பின்னர்
நாகேஷ்வர ராவுக்காக விட்டு கொடுத்துள்ளார்.இந்த படத்தில் அலெக்ஸாண்டர் ரோலில் நடித்திருப்பவர் நம்ம நடிகர் திலகம் "சிவாஜி கணேசன்".
Title: Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
Post by: ஸ்ருதி on May 05, 2012, 06:40:00 PM
(https://m.ak.fbcdn.net/a5.sphotos.ak/hphotos-ak-ash4/303384_221934904576763_15488690_n.jpg)

இன்று தமிழ்ப்பட உலகின் முதல் "கனவுக்கன்னி" டி.ஆர்.ராஜகுமாரி அவர்களின் பிறந்த நாள் ஆதனால் அவர் கதாநாயகியான வரலாறு .

'தமிழ் சினிமாவின் தந்தை' என்ற புகழுக்குரிய இயக்குநர் கே.சுப்ரமணியம் தன்னுடைய 'கச்சதேவயானி' படத்துக்காக கதாநாயகியைத் தேடிக் கொண்டிருந்தார். ஒரு நாள், நடிகை எஸ்.பி.எல். தனலட்சுமி இல்லத்துக்குச் சென்றிருந்தபோது, தனலட்சுமியின் அக்கா மகள் ராஜாயி காபி கொண்டு வர, பார்த்த நொடியே ‘இவர்தான் கதாநாயகி’ என்று முடிவு செய்துவிட்டார் சுப்பிரமணியம். ஆனால், ‘இந்தப் பெண் கதாநாயகியா... உங்களுக்கென்ன பைத்தியமா?’ என்று மேக்கப் டெஸ்ட்டின்போது கேட்டிருக்கிறார் ஒப்பனை நிபுணர்.

அதையெல்லாம் மீறி, அந்த ராஜாயி, 'ராஜகுமாரி'யாக பெயர் மாறி, அந்தப் படத்தில் அறிமுகமானார் என்பது வரலாறு...
Title: Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
Post by: ஸ்ருதி on May 05, 2012, 06:41:13 PM
(https://m.ak.fbcdn.net/a3.sphotos.ak/hphotos-ak-prn1/536294_221934047910182_153944858042435_286076_1692719797_n.jpg)

சின்னப்பா பத்திரிகை விமர்சனங்களுக்கும், பத்திரிக்கை காரர்களுக்கும் எப்போதும் மரியாதை கொடுத்துள்ளார் . ஒரு முறை பத்திரிக்கையாளர் ஒருவர் இவரைப் பற்றி தப்பாக எழுதியிருந்ததை ஒரு நண்பர் இவரிடம் எடுத்துக் காட்டினாராம். பத்திரிக்கையாளரை திட்டுவதற்குப் பதிலாக, சின்னப்பா "நம்மிடம் ஆயிரம், ஆயிரம் தவறுகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க அவைகளை எடுத்துக் காட்டுபவரிடம் எதற்காக சண்டை போட வேண்டும்" என்று சொன்னாராம்
Title: Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
Post by: ஸ்ருதி on May 05, 2012, 06:42:06 PM
மூன்று முகம் படத்துக்கு முதலில் வைத்த பெயர் " அலெக்ஸ் பாண்டியன்" இந்த பெயர் கிராமங்களில் எடுபடாது என்று சிலர் கருத்து தெரிவிக்க " அலெக்ஸ் பாண்டியன்" " மூன்று முகம்" ஆனது ...
(https://m.ak.fbcdn.net/a7.sphotos.ak/hphotos-ak-ash3/554364_221581937945393_153944858042435_285706_1725217046_n.jpg)
Title: Re: தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
Post by: ஸ்ருதி on May 05, 2012, 06:43:35 PM
கண்ணதாசன் பாசமலர் படத்தில் வாராயோ தோழி வாராயோ என்ற பாடலின் சரணத்தில்

"மலராத பெண்மை மலரும் - முன்பு
தெரியாத உண்மை தெரியும்" என்று எழுதியிருப்பார்.

சென்சார் போர்டில் இருந்தவர், "மலராத பெண்மை மலரும்" என்ற வரியைக் கொஞ்சம் நோண்டிப் பார்த்தால் விரசமாகவும் இருக்கிறது, கவித்துவமாகவும் இருக்கிறது என்று கூறி கண்ணதாசனைப் பாராட்டி இருக்கிறார்.



(https://m.ak.fbcdn.net/a7.sphotos.ak/hphotos-ak-ash3/536540_221559404614313_153944858042435_285669_824893820_n.jpg)