-
கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்
தமிழின் சிறப்பு அதன் தொன்மத்தில் மட்டுமல்ல அதன் தொடர்ச்சியிலும் என்பது அறிஞர் கருத்து. இந்த தொடர்ச்சி தமிழுக்கு உண்மையில் இருக்கின்றதா என்பதே சிலருக்கு சந்தேகம். தமிழ் வரலாற்றில் பல உயர்வுகளும் தேக்கங்களும் இருப்பது உண்மை. தமிழ் தேய்ந்திருந்தபொழுது அதன் தொடர்ச்சி விட்டுப்போய், அதன் பின் தோன்றியவை தொடர்ச்சி இல்லை என்று சொல்பவரும் உண்டு. இந்த காலக்கோடு, தமிழின் தொன்மத்தையும் தொடர்ச்சியையும் உணர்த்த, தொடுக்க ஒரு சிறு முயற்சி ஆகும்.
பிறந்த திகதியை வைத்து அல்லது வரலாற்றுக் குறிப்புகளை வைத்து காலம் முதலில் தரப்படுகின்றது. வாழ்க்கைக்காலம் அடுத்த நூற்றாண்டிலேயே முக்கியம் பெற்றால், அந்த நூற்றாண்டில் சேர்க்கப்படுகின்றார். காலம் தெளிவாக தெரியாமல், நூற்றாண்டுக்கு மேலாக ஊகிக்க வேண்டியிருப்பின் ஆகப் பிந்திய கணிப்பிலேயே நபர்கள் சேர்க்கப்படுகின்றார்கள்.
தொல்பழங்காலம்/சங்ககாலம்
0 | 100 | 200 | 300 | 100 | 500 | 600 | 700 | 800 | 900 | 1000
1100 | 1200 | 1300 | 1400 | 1500 | 1600 | 1700 | 1800 | 1900 | 2000 | 2100
-
தொல்பழங்காலம்/சங்ககாலம்
**தலைச்சங்கம் - 4449 பாடிய புலவர்கள் - தமிழர் மரபுவழி வரலாறு
**இடைச்சங்கம் - 3700 பாடிய புலவர்கள் - தமிழர் மரபுவழி வரலாறு
**கடைச்சங்கம் - 449 பாடிய புலவர்கள் - தமிழர் மரபுவழி வரலாறு
**அகத்தியர்
**தொல்காப்பியர் - தொல்காப்பியம்
**சாத்தனார் - கூத்தநூல்
**ஔவையார்
** புறநானூற்றுப் புலவர்கள் - புறநானூறு
**கணியன் பூங்குன்றனார்
**சங்கத் தமிழ் பெண் புலவர்கள்
**நக்கீரன்
**இளவேட்டனார்
**அரிசில் கிழார்
**குறுங்கோழியூர்க் கிழார்
**பிசிராந்தையார்
**ஈழத்துப் பூதந்தேவனார்
-
கிமு 31
திருவள்ளுவர்
0
100
பரணர்
200
கபிலர்
கூடலூர் கிழார் - முதுமொழிக்காஞ்சி
300
மாறன் பொறையனார் - ஐந்திணை ஐம்பது எழுதியவர்
-
400
இளங்கோ - சிலப்பதிகாரம்
சீத்தலை சாத்தனார் - மணிமேகலை
புத்ததத்தர் - விநயவிச்சயம் எழுதியவர்
நல்லாதனார் - திரிகடுகம்
விளம்பிநாகனார் - நான்மணிக்கடிகை
காரியதாசன் - சிறுபஞ்சமூலம்
கணிமேதாவியார் - ஏலாதி
முன்றுரை அரையனார் - பழமொழி நானூறு
500
காரைக்கால் அம்மையார்
திருமூலர் - திருமந்திரம் எழுதியவர் (காலம்: ஆக பிந்திய கணிப்பு)
பெருவாயின் முள்ளியார் - ஆசாரக்கோவை
பிற்காலக் கபிலர் - இன்னா நாற்பது
பூதஞ்சேந்தனார் - இனியவை நாற்பது
600
காக்கை பாடினியார் - பெண் புலவர் - காக்கை பாடினியம்
கொங்குவேள் - பெருங்கதை ஆசிரியர்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருநாவுக்கரசு நாயனார்
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
திருத்தக்க தேவர் - நரிவிருத்தம்
700
சுந்தரமூர்த்தி நாயனார் - திருத்தொண்டர் புராணம்
திவாகர முனிவர்
ஆதிசங்கரர் - விவேக சூடாமணி
-
800
ஆண்டாள் (திருப்பாவை)
மாணிக்கவாசகர் - திருக்கோவையார், திருவாசகம்
திருத்தக்கதேவர் - சீவக சிந்தாமணி என்ற விருத்தத்தை இயற்றியவர்.
அவிநாயனார் - அவிநயம், பன்னிருபடலம், நாலடிநாற்பது, அவிநாயனார் யாப்பு, அவிநாயனார் காலவியல்[
நம்மாழ்வார்
திவாகரர் - ஆதி நிகண்டு எனப்படும் திவாகர நிகண்டு செய்தவர்.
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசையாழ்வார்
மதுரகவி ஆழ்வார்
பெருந்தேவனார் - பாரதவெண்பா பாடியவர்
திருமாளிகைத் தேவர் - திருவிசைப்பா 45 பாடல்கள்
நக்கீர தேவ நாயனார் -
900
அமிர்தசாகரர் - யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை [3]
பிங்கல முனிவர் - பிங்கலந்தை எழுதியவர்
திருக்கத்தேவர் - சீவகசிந்தாமணி
தோலாமொழித்தேவர்/சீவர்த்ததேவர் - சூளாமணி இயற்றியவர்
கருவூர்த்தேவர் - திருவிசைப்பா 105 பாடல்கள்
கையனார் - கையனார் யாப்பியல்
1000
இளம்பூரணர்
பட்டினத்தார்
செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி
குணசாகரர் - (1015-1040) - யாப்பருங்கல உரையாசிரியர்
நாதமுனிகள் - நாலாயிரத்திவ்ய பிரபந்தம் தொகுத்தவர்.
நம்பியாண்டார் நம்பி - திருமறை நூற்தொகுப்பு [4]
தீபங்குடி அளப்பருங்கடலார்/அமிதசாகரர் - யாப்பருங்கலம் இலக்கணநூல் இயற்றியவர்
புத்திரமித்திரர் - வீரசோழியம் இலக்கணநூல் எழுதியவர்
கருவூர்த் தேவர் - ஒன்பதாம் திருமுறை, இராசராச சோழன் குரு
1100
பவணந்தி - நன்னூல் இயற்றியவர்
ஒட்டக்கூத்தர்
கம்பர்
அம்பிகாபதி - சம்பநாடன் சிறப்புப்பாயிரம், அம்பிகாபதிகோவை
புகழேந்தி
புத்தமித்திரன் வீரசோழியம் இயற்றியவர்; சமணர், வீரசோழன் (ஆட்சி 1063-70) காலத்தவர்.
பெருந்தேவன் (உரையாசிரியர்) வீரசோழிய உரையாசிரியர் (சமணர்)
பேராசிரியர் - தொல்காப்பியம் உரையாசிரியர்
திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் - திருக்களிற்றுப் படியார்
நாற்கவிராச நம்பி - நம்பி அகப்பொருள்
கச்சியப்ப சிவாசாரியார் - கந்தபுராணம் இயற்றியவர்
குண வீர பண்டிதர் - நேமிநாதம் எழுதியவர்
அனபாயன் - தண்டியலங்காரம்
தேவநாயனார் - சைவ சிந்தாந்த நூல் திருவுந்தியார் இயற்றியவர்
நாற்கவிராச நம்பி - அகப்பொருள் விளக்கம் எழுதியவர்
அழகிய மணவாளச்சீயர் - பன்னீராயிரப்படி எழுதியவர் [5]
அடியார்க்கு நல்லார் - சிலப்பதிகாரம் உரையாசிரியர்
-
1200
இளம்பூரணர் - தொல்காப்பிய உரையாசிரியர்
பேராசிரியர் - தொல்காப்பிய உரையாசிரியர்
சேனாவரையர் - தொல்காப்பிய உரையாசிரியர்
பொய்யாமொழிப் புலவர்
சேக்கிழார் - பெரியபுராணம் தொகுத்தவர்
மெய்கண்ட தேவர்
உமாபதி சிவாச்சாரியார்
வேதாந்த தேசிகர்
மணக்குடவர்
அருணந்தி சிவாச்சாரியார் - சிவஞான சித்தியார் சைவசிந்தாந்த நூல், இருபாவிருபஃது
அருணுலை விசாகன் - பாரதம் மொழி பெயர்ப்பாளர், நூல் கிடைக்க வில்லை
நஞ்சீயர் - பல வைணவ ஆக்கங்களின் உரையாசிரியர்
1300
பரிமேலழகர் - திருக்குறள் உரையாசிரியர்
இரட்டைப்புலவர்: இளஞ்சூரியர் - முதுசூரியர்
சிவாலய முனிவர் 1375-1400, அகத்தியர் தேவாரத் திரட்டு
நமச்சிவாய மூர்த்திகள் - திருவாடுதுறை ஆதீனம் நிறுவியவர்.
போசராசபண்டிதர் - சரசோதிமாலை - 1310 ஈழத்தில் இருந்தும் வெளியான, இன்று எமக்கு கிடைக்கும் தொன்மையான நூல்[7]
சீகாழி தத்துவப் பிரகாசர் - தத்துவப் பிரகாசம் என்ற சித்தாந்த நூல் இயற்றினார்.[8]
நச்சினார்கினியார் - உரையாசிரியர்
அதிமதுரக்கவிராயன் -
அதிவீரராம பாண்டியர் - நைடதம்
பத்திரகிரியார் - மெய்ஞ்ஞானப் புலம்பல்
சீகாழித் தத்துவப் பிரகாசர் - தத்துவப் பிரகாசம்
கச்சியப்ப சிவாசாரியர் - கந்தபுராணம்
சிற்றம்பல நாடிகள் - துகளறு போதம், இரங்கல் மூன்று, திருப்புன்முறுவல் -
வேதாந்த தேசிகர்
1400
இந்தக் கட்டுரை அல்லது பகுதி தனக்குள்முரண் கொண்டுள்ளது. தயவு செய்து இதனை சரிசெய்ய உதவுவீர்.
அகப்பேய்ச்சித்தர் -
அருணகிரிநாதர்
உத்திரநல்லூர் நங்கை- பாய்ச்சலூர்ப் பதிகம்
வில்லிபுத்தூரார் - பாரதம் இயற்றியவர்
காழி கண்ணுடைய வள்ளல் - ஒழிவிலொடுக்கம்
சட்டைநாத வள்ளல் (1475-1500). சிவஞான வள்ளலின் மாணாக்கர், சதாசிவரூபம் நூல் எழுதியவர். 626 அடிகள் உள்ள அகவற்பா. சீகாழிக்காரர்.
சிவஞான வள்ளல், கண்ணுடைய வள்ளலின் மாணாக்கர். 20 நூல்கள் கொண்ட ஞானநூல் தொகுதி, கொல்லாமையை வற்புறுத்தி பாடிய பாடல்கள் புகழ் பெற்றவை.
சிவப்பிரகாசர், மதுரை காலம் ~1488. உரையாசிரியர், இவருக்கு முன் இருந்த 20 ஆசிரியர்களைப் பற்றி அறியத்தருவது.
திருநெறி விளக்க ஆசிரியர் (சிவாலய முனிவரின் மாணாக்கர்) 1400-1425.
காளிமுத்தம்மை வருணகுலாதித்தன் மடல் நூலாசிரியை. காளமேகப்புலவர் காலம். ஈடற்ற காமச்சுவை, கவிச்சுவை நூல் என்பர். மடலூர்தலுக்கு இணையற்ற நூல் என்பர் (தமிழ்க் கலைகளஞ்சியம்).
சிங்கை பரராசசேகரன்
வீரராகவ முதலியார், முத்தமிழ்க்கவி 15 ஆவது நூற்றாண்டு.. நூல்கள்: திருவேங்கடக் கலம்பகம், திருக்கண்ண மங்கைமாலை, வரதராசர் பஞ்சரத்தினம், பாலூர்க் கலம்பகம், செய்யூர்ப் பிள்ளைத்தமிழ், தனிப்பாடல்கள்.
கயாதர முனிவர்
காளமேகப்புலவர் - யமகண்டம், பிரப்பிரம்ம விளக்கம், சித்திரமடல்
அகப்பேய்ச் சித்தர் -
பரஞ்சோதி - திருவிளையாடற் புராணம்
இரட்டையர் இளஞ்சூரியன், முதுசூரியன் - ஏகாம்பரநாதர் உலா
சொக்கநாதப் புலவர் - கிள்ளைவிடு தூது
அம்பலவாண தேசிகர் - பத்து பண்டார சாத்திரங்கள் இயற்றியவர், மூன்று இதர நூல்களையும் இயற்றியவர்[9]
தத்துவராயர் - 18 சமய நூல்கள்
பகழிக் கூத்தர்
கடவுள் மாமுனிவர்
மணவாள மாமுனிவர்
சட்டைநாத வள்ளல் - சாதாசிவரூபம்
சிவஞான வள்ளல் - வள்ளல் சரித்திரம்
-
1500
நச்சினார்க்கினியர்
அநதாரியப்ப முதலியார் (1564) சுந்தரபாண்டியம் (நூல்) என்னும் நூலாரிசியர் 3000 பாடல்கள். 2034 கிடைத்துள்ளன
புகழேந்தி
அதிவீரராம பாண்டியர்
என்றிக்கே என்றீக்கசு (1520-1600) தம்பிரான் வணக்கம், முதலில் அச்சு இயந்திரம் கொண்டு தமிழ் நூல் பதிப்பித்தவர்.
மண்டலபுருடர், வீரை என்னும் வீரபுரம், சூடாமணி நிகண்டு, திருப்புகழ் புராணம், சூடாமணி உள்ளமுடையான் கிருட்டின தேவராயர் காலத்தவர் (மு. இராகவையங்கார், ஆராய்ச்சித்தொகுதி பக். 483)
வண்ணப் பரிமளப் புலவர் - ஆயிரமசலா
ஆலிப் புலவர் - புலவர் சிரோன்மணி - மிகுராசு மாலை
பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற்புராணம்
அரசகேசரி
முத்துத் தாண்டவர் - தமிழிசை
ஆறுமுசுவாமிகள் - நிட்டானுபூதி இயற்றியவர்
இரேவணசித்தர் - அகராதி நிகண்டு எழுதியவர், அகர வரிசையில் அமைந்த முதலாவது நிகண்டு
குருஞான சம்பந்தர் - தருமபுர சைவ ஆதீன அமைப்பாளர், எட்டு தமிழ் சைவ மெய் நூல்களின் ஆசியர்
பரஞ்சோதியார் (16ம் நூற்றாண்டு) - சிதம்பரப் பாட்டியல்
யாகோபுச் சித்தர் - பாடல்கள்
செரூபானந்தர் - அத்துவைத சிந்தாந்த அறிஞர்; சிவப்பிரகாசப் பெருந்திரட்டு நூலின் ஆசிரியர்
அருட்டிரு தாண்டவராயர் - கைவல்ய நவநீதம்
1600
முத்துராசா கவிராசர் - கைலாயமாலை
தத்துவ போதகர் இராபர்ட் தெ நோபிலி - நவீன தமிழ் உரைநடையின் தந்தை, 24 உரைநடை நூல்கள்
அம்மைச்சி - வருணகுலாதித்தன் மடல் இயற்றியவர்
கனகவிராயர் - ஷேகு நயினார்கான் - கனகாபிசேக மாலை எழுதியவர்
உமறுப் புலவர் - சீறாப் புராணம்
கனக கவிராயர் - கனகாபிடேக மாலை
அருளையர் (1659) தாயுமானவரின் சின்னம்மாவின் மகன். கிடைத்துள்ள பாடல்கள் சில.
வீரமா முனிவர் (1680 - 1747) - தேம்பாவணி, திருக்குறள் இலத்தீன் பெயர்ப்பும் உரையும்
சீகன் பால்க் (1683 - 1719) - Ziegenbalg, Bartholomaeus (1683 - 1719) -தமிழில் விவிலிய மொழிபெயர்ப்பு
குமரகுருபரர்
படிக்காசுப் புலவர்
நல்லாப்பிள்ளை
வேலைய சுவாமி 17 ஆம் நூற்றண்டு; துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமியின் தம்பி, நல்லூர்ப்புராணம், வீரசிங்கநாதன் புராணம், மயிலை இரட்டைமணி மாலை, சீகாளத்தி புராணத்தில் கடைசி 12 சுருக்கங்கள்
வைத்தியநாத நாவலர் இலக்கண விளக்கம், திருவாரூர் பன்மணிமாலை, நல்லூர்ப்புரானம், மயிலம்மைப் பிள்ளைத்தமிழ்
வேங்கட நாதர்
வைத்தியநாத முனிவர் யாழ்ப்பாண அளவெட்டி ஊரினர். வியாகிரபாத புராணம் (தமிழ்ப் புலவர் சரிதம்) பாடியவர்.
காசீம் புலவர் - நபிகள் நாயகத்தை பாட்டுத் தலைவராக கொண்டு திருப்புகழ் இயற்றியவர்.
வரத பண்டிதர்
வராத்துங்க ராம பாண்டியன் - இன்ப விளக்கநூல் - கோக்கோகம்
அந்தக்கவி வீரராகவ முதலியார் - திருவாரூர் உலா, சீட்டுக்கவி
அகோர முனிவர் - கும்பகோணப் புராணம், திருக்கானிப்பேர்ப் புராணம், தேதாரணிய புராணம் ஆகியன இயற்றியவர்
அமிர்ந்த கவிராயர் - ஒரு துறைக்கோவை - நாணிக்கண் புதைத்தல்
அமுத பாணியார் - வள்ளுவர் பிள்ளைத் தமிழ், மணிவாசகர் வரலாறு
சுப்புரமணிய தீட்சிதர் - பிரயோக விவேகம் இலக்கண நூல் எழுதியவர்
சிவப்பிரகாசர் (துறைமங்கலம்) - பல நூல்கள், பிரபுலிங்க லீலை
-
1700
சேகாதிநயினார் - திருமணக்காட்சி காப்பியம் இயற்றியவர்
பனீ அகமது மரைக்காயர் - சின்ன சீறா காப்பியம் இயற்றியவர்
ரேனியஸ் (1789 - 1838)
தாயுமானவர் (1705 - 1742)
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், (1716-1780)
பாடுவார் முத்தப்பர் (1767 - 1829)
அரங்கநாதக் கவிராயர், அட்டாவதானம் (~1753) 2477 பாடல்களில் பாரதம் பாடினார்
சேனாதிராச முதலியார், (1750-1840)
அட்டாவதானம் கிருஷ்ணய்யங்கார் எழுதிய சமுத்திர வருணனை
அந்தோணிக்குட்டி அண்ணாவியார் தூத்துக்குடி, கிறிஸ்தவ இசைக் கீர்த்தனைகள் பாடியுள்ளார்
வேதநாயக சாஸ்திரி (தஞ்சை வேதநாயகர், 1774 - 1864)
முத்துக்குமாரக் கவிராயர் (1780 - 1851)
சிவஜான முனிவர் (1785) - சூத்துரவிருத்தி
காஞ்சிபுரம் இராமசாமியார் (1735 - 1817) - தமிழ் நூல்களை பதுப்பித்தவர்
ஆளவந்தார், வீரை. 18 ஆவது நூற்றாண்டு. ஞானவசிட்டத்தை செந்தமிழ் விருத்தத்தில் பாடினார்.
இராமநாத கவிராயர், ஆழ்வார் குறிச்சி. 18 ஆம் நூற்றாண்டு (ஆறை அழகப்ப முதலியார் 1676-1780 காலத்தில் வாழ்ந்தவர்)
இலக்குமண பாரதியார் பிறப்பு 1768-1859. சிவமலைக் குறவஞ்சி, தமிழ் இசைப்பாடல்கள் பாடியுள்ளார்
கந்தசாமிப் புலவர், முத்தாலங்குறிச்சி, திருவனந்தபுரம் நொண்டி நாடகம், கட்டபொம்மு காலத்தவர்.
கவிராஜ பண்டிதர், திருச்செங்கோட்டுப் புராணம் பாடினார். இவர் தந்தையார் காசித்தல புராணம் பாடினார்.
பெப்ரீசியஸ் Fabricius, Johann Philip (1711-1791) முதல் தமிழ்-ஆங்கில அகராதி தொகுத்தவர்
பிலிப்பு தெ மெல்லோ (1723-1790)- தமிழில் விவிலிய மொழிபெயர்ப்பு
மிரோன் வின்சுலோ (1789-1864)
திரிகூடராசப்பக் கவிராயர் - திருக்குற்றாலக் குறவஞ்சி
கூழங்கைத்தம்பிரான்/கனகசபாபதியோகி
மயில்வாகனப் புலவர் - யாழ்ப்பாண வைபவமாலை
வரதபண்டிதர் -
அருணாசலக் கவிராயர் - தமிழிசை
மாரிமுத்துப் பிள்ளை - தமிழிசை
பலபட்டைச் சொக்கநாதப் புலவர்
சவ்வாதுப் புலவர்
கச்சியப்ப முனிவர் - தணிகை புராணம்
அபிராம்பிப் பட்டர் - அபிராமி அந்தாதி எழுதியவர்
அம்பலவாணக் கவிராயர் (சேலம்) - அறப்பளீச்சுர சதகம் பாடியவர்
அம்பலவாணக் கவிராயர் (மருதூர்) - ஆதித்தபுரி புராணம் பாடியவர்
அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான் - திரிபதார்த்த தீபம் எழுதியவர்
அழகிய நம்பி - குரும்பரம்பரை எழுதியவர்
அனந்தபாரதி ஐயங்கார் - உத்தர ராமாயணகீர்த்தனை, பாகவத தசமஸ்கந்த நாடகம், யானைமேழகர் நொண்டிச்சிந்து ஆகியன இயற்றியவர்.
ஆண்டிப் புலவர் - ஆசிரிய நிகண்டு, உரையறி நன்னூல், நன்னூல் உரை ஆகியன இயற்றியவர்.
அதிவராக கவி - வடமொழி நூல் காதம்பரி மொழிபெயர்ப்பாளர்
எல்லப்ப நாவலர் - அருணாசல புராணம்
கீழையூர்ச் சடகோபதாசர் - அரிசமய தீபம்
ஈசுர பாரதி - பல்பொருட் சூடாமணி
ஆனந்தரங்கப்பிள்ளை - ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகள்
ஜவ்வாதுப் புலவர் - முகியித்தீன் பிள்ளைத் தமிழ்
சிவஞான முனிவர் - சிவஞான பாடியம் உட்பட்ட 28 நூல்கள்; இலக்கணம், இலக்கியம், தருக்கம், சைவ சிந்தாந்தம், மொழிபெயர்ப்பு வல்லமை
-
1800
குணங்குடி மஸ்தான் சாகிபு (1788 - 1835) - நிராமயக்கண்ணி உட்பட்ட 14 நூல்கள்
ஆனை-ஐயா இருவர், (1800-1832) இசைப்பாடல்கள் இயற்றினர். மகா வைதியநாதையருடைய குரு.
குணசேகர முதலியார் - அரேபிய இரவுகள் தமிழ் மொழிபெயர்ப்பு - 1825
ஆலால சுந்தரம் பிள்ளை (1852-1922), காஞ்சி
அரங்கப்பிள்ளை கவிராயர் "அரிச்சந்திர விலாசம்" எழுதியவர் 1867ல் வெளியாகியது
கால்டுவெல் (1814-1891)- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
ஜி. யு. போப் (1820 - 1908) திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு
ஃபிரான்சிசு வொயிட் எல்லிஸ் (இந்தியாவில்: 1796-1819) - திருக்குறளுக்கு உரை
அங்கமுத்துப் புலவர் (கடிகை அங்கமுத்துப் புலவர்) ~ 1808, 219 பாடல்கள் கொண்ட நூலாசிரியர்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815 - 1876)
அப்துல் காதிறு நெய்னா லெப்பை ஆலிம் புலவர் - நாகயந்தாதி உட்பட பல காவியங்கள்
ஆறுமுக நாவலர் (1822 - 1879)
வேதநாயகம் பிள்ளை (1826 - 1889) "மாயூரம் வேதநாயகர்" - முதல் தமிழ் புதினம்: பிரதாப முதலியார் சரித்திரம்
அசலாம்பிகை அம்மை, பண்டிதை, பிறப்பு 1875, ஆனந்தபோதினி இதழில் எழுதியவர்.
பூவாளூர் தியாகராசச் செட்டியார் (1826 - 1888)
எச். ஏ. கிருஷ்ணபிள்ளை (1827 - 1900) இரட்சணிய யாத்திரீகம்
இராமலிங்க அடிகளார் (1823-1874)
சி. வை. தாமோதரம்பிள்ளை (1832 - 1901)
இராசகோபால பிள்ளை, கோமளபுரம், 1869ல் தொல்காப்பியம் வெளியிட்டார்; பல நூல்கள்.
மாம்பழக் கவிச்சிங்க நாவலர் (1836 - 1864)
முகவை பொன்னுசாமித் தேவர் (1837 - 1870)
கார்ல் கிரால் (Karl Graul) (1838-1879) - திருக்குறள் செர்மானிய மொழிபெயர்ப்பு
தண்டபாணி சுவாமிகள் (1839 - 1899)
சர்க்கரை வீ. செந்தில்வேலு முதலியார் (1842 - 1911)
பாம்பன் சுவாமிகள் (1851 - 1929)
பூவை கலியாணசுந்தர முதலியார் (1854 - 1918)
நரசிம்மலு நாயுடு (1854 - 1922)
குமாரசுவாமிப்புலவர் (1854 - 1922)
உ. வே. சாமிநாதையர் (1855 - 1942)
வீ. கனகசபை பிள்ளை (1855 - 1906)
பெ. சுந்தரம்பிள்ளை (1855 - 1897)
ஆ. சிங்காரவேலு முதலியார் - (1855-1932) அபிதான சிந்தாமணி
சிந்நயச் செட்டியார் (1855 - 1900)
சொக்கலிங்க ஐயா (1856 - 1931)
கார்த்திகேய முதலியார் (1857 - 1916)
வெ. ப. சுப்பிரமணிய முதலியார் (1857 - 1942)
ஆபிரகாம் பண்டிதர் (1859 - 1930)
கல்லடி வேலுப்பிள்ளை (1860 - 1944)
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் (1862 - 1914)
கோ. வடிவேலு செட்டியார் (1863 - 1936)
செல்வக்கேசவராய முதலியார் (1864 - 1921)
தி. இலக்குமணப் பிள்ளை (1864- 1950)
அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891)
மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளை (1866 - 1947)- தமிழ் இலக்கிய வரலாறு
சங்கரதாஸ் சுவாமிகள் (1867 - 1922)
வள்ளல்பாண்டித்துரைத் தேவர் (1867 - 1911)
சோழவந்தான் அரசஞ் சண்முகனார் (1862 - 1915)
பரிதிமாற் கலைஞர் (1870 - 1903)
இரா. இராகவையங்கார் (1870 - 1946)
நா. கதிரவேற்பிள்ளை (1871 - 1907)
சுப்பிரமணிய சிவா (1871 - 1925)
பா. வே. மாணிக்க நாயக்கர் (1871 - 1931)
வ. உ. சிதம்பரம் பிள்ளை (1872 - 1936)
ஞானியார் அடிகள் (1873 - 1942)
பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964)
செய்குத்தம்பிப் பாவலர் (1874 - 1950)
தேசிகவிநாயகம் பிள்ளை (1876 - 1954)
கா. நமச்சிவாயம் (1876 - 1936)
மறைமலை அடிகள் (1876-1950)
எஸ். வையாபுரிப்பிள்ளை (1891-1956)
ந. மு. வேங்கடசாமி
அ. வேங்கடாசலம் பிள்ளை
ரா. பி. சேதுப்பிள்ளை
கா. சுப்பிரமணியப் பிள்ளை
நாவலர் சோமசுந்தர பாரதியார்
மு. இராகவையங்கார்
அயோத்தி தாசர்
இராமசாமிக் கவிராயர் என்னும் பெயரில் 7 பேர் (சேதனப்ப்ட்டு, மதுரை,
மிதிலைப்பட்டி, சேற்றூர், உடுமலை, தென்குழந்தாபுரி, மானாமதுரை)
இராமசாமி செட்டியார் 3 பேர் இருந்தனர் (கானாடு காத்தான், உறையூர்,
திருவெவ்வுளூர்)
ஈசுரமூர்த்தியா பிள்ளை மு.பொ, திருநெல்வேலி, "நாட்டுப்பெண் கும்மி", நீதி நெறித் தாலாட்டு"..
உலகநாத சுவாமி திருவிடைமருதூர், ரிபு கீதை எழுதியவர், 1924 பாடல்கள் மற்றும் பல..
உலகநாத பிள்ளை, ஆராய்ச்சிப் பெரும்புலவர், இறப்பு 1941.
தி. வை. சதாசிவ பண்டாரத்தார் (1892-1960) சோழர் வரலாறு முதலிய பல நூலக்ள்.
சி. வை. தாமோதரம்பிள்ளை
-
1900
வ. ராமசாமி (வ.ரா.) (1889-1951)
தேவநேயப் பாவாணர் (1902- 1981)
அ. கி. பரந்தாமனார் (1902 - )
மகாகவி பாரதியார் (1882 - 1921)
பாரதிதாசன் (1891 - 1964)
கி. ஆ. பெ. விசுவநாதம் - (1899 - 1994)
நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை (1876 - 1954)
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
ச. தண்டபாணி தேசிகர்
ந. பிச்சமூர்த்தி
சி. பா. ஆதித்தனார் - (1905 - 1981)
புதுமைப்பித்தன் (1906-1948)
கல்கி (1899 - 1954)
புலவர் குழந்தை (1906 - 1978)
கொத்தமங்கலம் சுப்பு (1910 - 1974)
அ. சிதம்பரநாதன்
மு. வரதராசனார்
சி. இலக்குவனார்
மா. இராசமாணிக்கனார்
சதாசிவ பண்டாரத்தார்
திரு. வி. கல்யாணசுந்தரனார்
ம. பொ. சிவஞானம்
வண்ணதாசன் (1915 - 1974)
கம்பதாசன் (1916 - 1964)
லா. ச. ராமாமிர்தம் (1916 - 2007)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்(1930 - 1959)
எஸ். டி. சுந்தரம் (1922 - 1979)
கா.அப்துல் கபூர் (1924 - 2002)
பெருஞ்சித்திரனார்
கண்ணதாசன்
மு. கருணாநிதி
சேவியர் தனிநாயகம் அடிகள் (1913-1980)
வி. செல்வநாயகம்
இரா. இளங்குமரனார்
வா. செ. குழந்தைசாமி
இன்குலாப்
கார்த்திகேசு சிவத்தம்பி - (1932)
எஸ். வையாபுரிப்பிள்ளை
வைரமுத்து
இரா. அருளப்பா (1912-1996) திருக்குறளில் கிறித்தவ சிந்தனைகள் பற்றிய ஆய்வாளர்
மு. மேத்தா
சவரிமுத்து இராசமாணிக்கம் தத்துவ போதகர் பற்றிய ஆய்வாளர்
வி.மி. ஞானப்பிரகாசம் வீரமாமுனிவர் பற்றிய ஆய்வாளர்
வி. மரிய அந்தோணி தேம்பாவணி உரையாளர்
கு. மோகனராசு திருக்குறள் ஆய்வாளர்
பூலோகசிங்க அருளப்ப நாவலர்
அவ்வை துரைசாமி பிள்ளை
அவ்வை நடராசன்