FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on July 06, 2026, 05:06:26 PM
-
மருத்துவர் சொன்னதும்
ஆனந்தம் சூடி கொண்டேன்
என் கணவரிடம் சொல்ல
வெட்கம் சூடி கொண்டேன்
சொன்னேன் அவரிடம்
நான் தாய்மை அடைந்தேன் என
என் காதலை சொன்ன
நேரம் போல் ஆனந்தம் அடைந்தார்
தொடங்கியது எங்கள் பிள்ளைகளுக்கான
எங்கள் தேடல்
பெயர் தேர்வு முதல் குழந்தையை சேர்க்கும்
பள்ளி தேர்வு வரை ஆயிற்று
குழந்தையை மார்பில் போட்டு
தாலாட்ட கற்று கொண்டேன் நூறு பாடல்
அக்கறையாய் மருத்துவரிடம் கூட்டி சென்றார்
மாதமொருமுரை. குழந்தையின் இதய துடிப்பு
கேட்டேன்
பத்து மாதம் கடந்தது வெளியுலகு வந்து
தன்தந்தையை காணும் ஆவலில் -எட்டி உதைத்தான்
என் வயிற்றில்
ஆனந்த வலியில் மருத்துவமனை சென்றேன்
அருகில் அன்பாய் என் கை கோர்த்து என் தலை கோதி
என் கணவர்
பிரசவ அறையில் நான் துடிக்க -
வெளியில் நின்று என் கணவர் துடிக்க
சொர்க்கமும் நரகமும் ஒரு சேர
அனுபவித்தோமே
ஆண் பிள்ளை என்றாலும் பெண் பிள்ளை
என்றாலும் கள்ளி பாலுக்கு இடம் இல்லை
என்றிருந்தோம்
கடைசியில் கள்ளி பால் எங்களுக்கு தந்து
சென்றாயே பிரசவ அறையை சவ அறையாக்கி
கண்விழித்தவளிடம் என்ன சொல்வேனோ !? :(
***Joker***
-
ஒவ்வொரு வரியும் மனதை கனக்க வைத்தது...
கடைசி வரி கண்களை கலங்க வைத்தது.
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலி.
மனதைத் தொட்ட படைப்பு.