FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: MysteRy on July 06, 2026, 01:00:32 PM
-
(https://i.ibb.co/Ng37gMk3/741365852-4333464673537265-5578388712128554920-n.jpg)
அவர்கள் காதல் பெண் வீட்டுக்கு தெரிந்ததும் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. இதை அறிந்த பெண் யாருக்கும் தெரியாமல் 'இனி உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன்' என கடிதம் எழுதி வைத்து விட்டு பையனோடு ஊரை விட்டு ஓடி விடுகிறாள். மறுநாள் பெண் வீட்டாரும் பெண்ணை எங்கெங்கோ தேடி அலுத்துப்போய், இனி அந்த பெண் வந்தாலும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர்.
இப்பதான் கதையில் திருப்பம்...
மூன்று நாள் கழித்து அந்த பெண் தனியாக பையன் இல்லாமல் வந்து நிற்கிறாள். வாசலில் நிறுத்தி அவளை திட்டுகிறார்கள் பெற்றோரும் உறவினர்களும்..
அப்பா : "இப்ப எதுக்கு வந்த? உனக்கு என்ன வேணும்?"
அம்மா : "ஊரார் முன்னாடி எங்களை கொன்னுட்டே.. இப்ப எங்கடி வந்த?"
அண்ணன் : "ஏன் மறுபடியும் வந்து தொல்லை பண்றே? நீ செத்துபோய் மூணு நாளாச்சு போய் தொலை?"
மூன்று பேரும் அவள் என்ன சொல்ல போகிறாள் என்று பரபரப்பாக காத்திருக்கின்றனர். அவள் சொன்ன பதிலை கேட்டு அந்த முன்று பேர் மட்டும் அல்ல.. இந்த உலகமே அதிர்ந்தது.
அந்த பதில் என்ன?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
"அவர் வாங்கி தந்த நோக்கியா போனின் சின்ன பின் சர்ஜரை மறந்து வச்சிட்டு போயிட்டேன். அதை மட்டும் எடுத்துட்டு போயிடுறேன்மா."
கதை #நீதி : எவ்வளவு உசத்தியான போன் வாங்கினாலும் மூன்று நாளுக்கு மேல் சார்ஜ் நிற்காது..