FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Shreya on January 14, 2026, 03:05:53 AM

Title: புரியாத புதிர்!!
Post by: Shreya on January 14, 2026, 03:05:53 AM

​தொலைந்த உன்னை மீட்டெடுக்க
எத்தனை முறையோ போராடிவிட்டேன்...
செய்த தவறுக்கு
மன்னிப்பும் கேட்டுவிட்டேன்...

​ஆனால் உன்னிடமோ...
எந்த சலனமும் இல்லாத
மௌனம் மட்டுமே!!

​வெறுப்பா...விலகலா?
அல்லது வெறும் வெறுமையா?
உன் மௌனத்தின் மொழி புரியாமல்
நான் திணறுகிறேன்...

​உன் மௌனம்...
நம் உறவின் முற்றுப்புள்ளியா?
அல்லது வெறும் இடைவேளையா?