FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Shreya on January 14, 2026, 03:05:53 AM

Title: புரியாத புதிர்!!
Post by: Shreya on January 14, 2026, 03:05:53 AM

​தொலைந்த உன்னை மீட்டெடுக்க
எத்தனை முறையோ போராடிவிட்டேன்...
செய்த தவறுக்கு
மன்னிப்பும் கேட்டுவிட்டேன்...

​ஆனால் உன்னிடமோ...
எந்த சலனமும் இல்லாத
மௌனம் மட்டுமே!!

​வெறுப்பா...விலகலா?
அல்லது வெறும் வெறுமையா?
உன் மௌனத்தின் மொழி புரியாமல்
நான் திணறுகிறேன்...

​உன் மௌனம்...
நம் உறவின் முற்றுப்புள்ளியா?
அல்லது வெறும் இடைவேளையா?
Title: Re: புரியாத புதிர்!!
Post by: joker on January 17, 2026, 12:00:35 PM
சில உறவுகள் முற்றுப்புள்ளியாக இருந்தாலும்
நினைவுகளில் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்
 வாழ்நாள் உள்ளவரை

தொடர்ந்து எழுதுங்கள்  :)
 
Title: Re: புரியாத புதிர்!!
Post by: Shreya on January 26, 2026, 11:19:56 PM
நன்றி..எழுதி கொண்டே இருக்கிறேன் என் கிறுக்கல்கள்..