FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Shreya on January 07, 2026, 01:00:26 AM

Title: வரம்!!
Post by: Shreya on January 07, 2026, 01:00:26 AM
விழியோரம் நதிபெருக, விதியோரம்
வழி தொலைய.. அவள் நிழலோடும்
பேசத் துணையின்றி நின்றிருந்தாள்..!!

​அவள் முன் தோன்றிய இறைவன், என்ன வரம்
வேண்டும் கேள் என.. பேதையோ
கண்ணீரைத் துடைக்காமல்
கைகூப்பி வேண்டினாள்..

​அழுது தீர்க்கவே இந்த பிறவியோ??
ஆயிரம் சொந்தம் இருந்தாலும்,
யாரும் எனக்கில்லை என்ற இந்த
வெறுமை..

​மனமெல்லாம் ரணமாகி போனபின்
வரம் ஏனோ???
வாழ மனமில்லை இவ்வுலகில்,
"என் ரணங்கள் ஆற.. ஒரு நீண்ட துயில் போதும்"🙏