FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Luminous on December 13, 2025, 08:23:15 PM
-
"சாதாரணத்தின் இருவேறுபாடு”
நான் 🙋♀️
நீ சொல்லுவாய் என்ற நம்பிக்கையில்
சாதாரணமென விட்டுச் சென்றேன்…🤷♀️
நீயோ 🙋♂️
சொல்ல வேண்டுமென்ற பொறுப்பை
சாதாரணமென விட்டுவிட்டாய்…🤷♂️
இரண்டும் ஒரே சொல்லே தான் — சாதாரணம்🤔
ஆனால்
ஒன்றில் நம்பிக்கை பேசுகிறது,💯💜
மற்றொன்றில் உதாசீனம் மௌனம் காக்கிறது.✌
LUMINOUS 🧘♀️
-
அருமையான கவிதை
பொருள் ஒன்றுதான்
ஆனால் இரு மாறுபட்ட
உணர்வுகள் .
சிந்திக்க வைக்கும் கவிதை
வாழ்த்துக்கள் தங்கச்சி
-
சாதாரணம் என்பது சிலருக்கு சாதாரணம், சிலருக்கு நம்பிக்கை என உணர்த்தும் அழகான கவிதை சகோ.