FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thenmozhi on November 26, 2025, 08:39:04 PM
-
மாவீரர் நாள்
கார்த்திகைத் திங்கள் 27ஆம் நாளாம் இன்று- நம் தமிழர்
காவியத் தெய்வங்களை வணங்கி வழிபடும் நாளும் அதுவே
காலங்கள் பல்லாண்டுகளாக உருண்டு ஓடினாலும்
காத்திருக்கின்றோம் -கல்லறையில் இருந்து மீண்டும் நீங்கள் உயிர்த்தெழுவீர்கள் என்ற நம்பிக்கையில்!
தமிழீழ மண்ணை மீட்டெடுக்க
தன்னுயிரை ஈர்த்த தியாக தீபங்கள் இவர்களே!
தன்னலமின்றி தமிழுக்காகவும்,தாய் மண்ணுக்காகவும் உயிர் நீத்த மாவீரர்களும் இவர்களே!
தமிழனின் வீரத்தினை உலகத்திற்கு பறைசாற்றிய வீர,வீராங்கனைகளும் இவர்களே!
இவர்களின் உடல்களில் செங்குருதிகளும், வீரத்தழும்புகளும்!
இவர்களின் கழுத்துகளில் சயனைட் குப்பிகளும்!
இவர்களின் மார்பிலும் ,கைகளிலும் ஆயுதங்களும்!
இவர்களின் மனதில் தமிழீழ தாயக விடுதலை கனவுகளும்!
இவர்களின் வாய் அண்ணன் கூறிய உறுதிமொழிகளை உரைத்தவாறும்!
இவர்களின் கால்கள் விடுதலையை நோக்கி வீறுநடை போடும்!
விடுதலைப் புலிகள்,கரும்புலிகள்,
கடற்புலிகள் எனும் பிரிவுகளாக !
விதவிதமான புனை பெயர்களுடன், சீருடை அணிந்து ,அணியாக போர்க்களத்தில்!
விண்ணைப் பிளக்கும் பீரங்கி ,வெடிகுண்டு சத்தம்!
விழும் எதிரிகளின் உடல் அடுக்கடுக்காக நிலத்தில்!
மாவீரர்களை பத்து திங்கள் சுமந்து ஈன்றெடுத்த தாய் என்றும் வீரத்தாய்!
மாவீரர்கள் கல்லறையில் புதைக்கப்படவில்லை, எங்களின் மனதில் விதைக்கப்பட்டவர்கள்!
மாவீரர்களை வணங்குகின்றேன், வழிபடுகின்றேன்!
(https://i.postimg.cc/28gpg47R/Gloriosa-lily-fire.jpg)
(https://i.postimg.cc/xT2pmtRW/IMG-20131126-WA0004.jpg)
-
மாவீரர் நாள் 🙏மண் மக்கள் மொழிக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நாள் இது. அவர்களின் இரத்தத்தால் எழுந்த வரலாறு நமக்கெல்லாம் நிலையான வழிகாட்டி. மறக்க முடியாத அந்த வீரச்சுவடுகளை வணங்கிப் போற்றுவோம்.