ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
கவிதைகளுக்கான விதிமுறைகள்
1-இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)
2-தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.
3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
Updated on 26 Oct 2020:
4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025
5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர் -2025 (https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/rules2.png)
இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற 8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்) என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
7-ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று கிழமை ) அடுத்த வார நிகழ்ச்சிக்கான நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.
நிழல் படம் எண் : 388இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/388.jpg)
ஓர் தசைப்பிண்டத்தில் தத்ரூபமாய் வடிவமைக்கப்பட்ட ஓர் உயிர்...
இம் மண்ணில் விருட்சமென
தடம் பதிக்கும் போது பல்வேறு சவால்கள்களும்
அவனுக்கே தெரியாது, அவன் கூடவே பயணிக்க தயாராகி விடுகின்றது..
காதல், நட்பு, தேடல், சந்தோசம், துக்கம் என்ற
பல பெயர்களில் பல்வேறு விடயங்களைத்தான்
இம் மண்ணில் மானிடன் மரணம் வரை
தேடியோடிக்கொண்டிருக்கிறான்.
எத்தனை உடைவுகள் வந்தாலும்
உறுதியாய், கற்பனையிலும் சிறந்த ஓர் உலகினை
தேடுவதும் அதனை நிஜமாக்கிட
போராடுவதும்தான் அவனின் இயல்பு..
வீழ்ந்து எழும் ஒவ்வொரு நொடியும்
விண்ணை எட்டிப் பிடிக்கும் தூரத்தை
உயர்த்திக் கொண்டுதான் இருக்கிறான்..
சிதைந்திருந்த அறியாமையிலும்
சித்தரிக்கப்பட்ட இம் மண்ணை
சிறந்த சிந்தனைகளால் அழகியதொரு சிற்பமாய்
செதுக்கியிருக்கிறான் பல்வேறு கல்வியியல் வளர்ச்சியாலும்
தொழில்நுட்ப வளங்களாலும்..
அப்பேர்ப்பட்ட சிந்தனையின்
சிகரம் தான் மானிடன்...
அப்படி இருந்தும் சில சமயங்களில்
சில உடைவுகள் ஊண்டத்தான் செய்கிறது..
அதற்காய் தன்னைத் தானே சமுதாயத்திற்கு இரையாக்கிவிட இயலாது அல்லவா!!??..
ஆம்..!
சமுதாயம் என்ற ஒன்றால்
தம்மை ஒளிர்விக்கவும் முடியும்
இருள் ஆக்கவும் முடியும்..
யாருக்கும் மயங்கி விடாது
பாறையின் இயல்பென
முனைந்து முன் நிற்க வேண்டும்..
பாறையைக் குடைந்தால்
அழகிய சிற்பம்,
பாறையை சிதைத்தால் பயிர்கள் விளையும் மண்..,
இத்தனையும் அதன் இயல்பில் இருக்கும் போது
வெரும் பாறை என்ற கணிப்பே..., ஆனால்
அதனுள் ஏதோ ஓர் அழுத்தத்தை பிரயோகிக்கும் போதே
அதன் உண்ணதம் வெளிப்படும்..
அவ்வாறே மானிடா நீயும் இங்கே...
போலி வார்த்தைகளால்
உள்ளத்தையும் மூளையையும் சலவை செய்யும் போது
உன்னை நீயே கூர்மையாக்கிக் கொள்..
உன்னுள் எழும் சிறந்த சிந்தனையே
உனக்கு முன் உருவாகும் உன் அழகிய உலகை மட்டும் அல்ல,
அவ் உலகில் உன் இடத்தையும் பிரதிபலிக்கும்.
[/b]