FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on November 19, 2025, 03:02:53 PM

Title: கல்யாணம் !
Post by: joker on November 19, 2025, 03:02:53 PM
கல்யாணம்

இரு மனங்கள் இணைந்தா
திருமணங்கள்
அரங்கேறுகிறது ?!

முன் பின் அறியாதவரோடு
பேசவே  தயங்கும் நாம்
ஆனால்
அவளோ
பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை என
தன் வாழ்க்கையையே
ஒப்படைக்கிறாள்

திருமண வயது எட்டிய
ஒவ்வொருவரின்
ஆசையின் துடிப்பு
வாழ்க்கையின் ரகசியம் அறிய
முதல் படி

சிலருக்கு அன்பின் பிறப்பிடம்
சிலருக்கு பகிர்ந்துகொள்ள கிடைத்த துணை
சிலருக்கு சோகத்தின் கொள்முதல் நிலையம்
சிலருக்கு ஆகவில்லையே என கவலை
சிலருக்கு ஆகிவிட்டதே என கவலை
விசித்திரமானது தான் திருமண பந்தம்

குடும்பத்திற்காக
வெளிநாட்டில் இருக்கும் கணவர்
வருடத்திற்கொருமுறை அவர் முகம் காண காத்திருக்கும்
குடும்பம்
தொழில்நுட்பம் வளர்ந்திருக்கலாம்
ஆனால்
அருகில் அணைத்து  உச்சிமுகர்ந்து கிட்டும்
முத்தம் தந்திடாது சுகம்
எக்காலம் ஆனாலும்

விலைமதிக்க முடியா
பாசங்கள் எல்லாம்
அலைபேசி தந்துவிடாது

பெண் பார்த்து
செய்திடும் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது
பொன் பார்த்து செய்திடும் திருமணம்
நரகத்திற்கான வாசலை திறந்துவிடுகிறது

பெண்ணை
மகிழ்ச்சியாய் வைத்திருந்தால்
சந்தோஷமாவது அவள் மட்டும் அல்ல
அவளை சுற்றியுள்ளவர்களையும்
குடும்பத்தையும் தான்

முள்ளுக்கு இடையே
இலைகளுக்கு நடுவே
மலரை தேடுகும் தேனீ போல
சோகத்தின் நடுவே
துன்பத்தின் இடையே
சிறுது
சிரித்து வாழவும்
கற்றுக்கொள்ளுங்கள்

பரஸ்பரம்
விட்டு கொடுங்கள்
ஜெயிப்பது
நீங்கள் தான்

சொர்க்கமும்
நரகமும்
நாம் வாழ்வதில் தான்
இருக்கிறது

விரல்கல் கோர்த்து கூட்டி செல்லுங்கள்
சொர்கத்தின் நுழைவாயில்
உங்களுக்காய் திறந்திருக்கும்



****Joker***