ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
கவிதைகளுக்கான விதிமுறைகள்
1-இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)
2-தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.
3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
Updated on 26 Oct 2020:
4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025
5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர் -2025 (https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/rules2.png)
இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற 8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்) என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
7-ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று கிழமை ) அடுத்த வார நிகழ்ச்சிக்கான நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.
நிழல் படம் எண் : 387இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://www.friendstamilchat.org/Forummedia/forumimages/OU/387.jpg)
உலகமரிய உறுதுணையாய் உருவெடுத்த தாய் தந்தையர்கள் தன் கடமைக்கு சிறு இடைவெளியாய்..,
இருகக் கைப்பிடிக்க மூன்று முடிச்சுக்குள் முறையாய் முத்திரை பதிக்கும் அழகிய தருணம்..
இரு உயிர் ஓர் உயிரென,
உன்னுள் நீ என்னுள் நான் என்று அக்கினி சாட்சியாய்..
மேளங்கள் முழங்கிட,
நாதஸ்வரம் ஒளித்திட,
அவன் ஆடையோடு அவள் ஆடை இறுகப்பிணைந்திட,
கரங்கள் கோர்த்து ஆசிர்வதங்களாய் அர்ச்சனைகளும் ஆனந்தக்கண்ணீரோடு சேர்ந்திட,
மெட்டி அவள் விரலோடு பிணைந்திட,
இத்துனை அழகும் மயில் மீதுள்ள வண்ணங்களாய் தோகை விரித்தாடிடும்.., இரு பந்தங்களின் இணைப்பில்.
புது வாழ்வில் அடி பதிக்கும் அந்த நாளே
பல உண்மைகளை உரக்கச் சொல்லிடும்..
இத்துனை நாட்களும் தனித்திருப்பில் நகர்த்தினாய்,
உன் அன்னை மடியிலும் தந்தை அரவணைப்பிலும் தேங்கி நின்றாய்,
ஆனால் இன்றிலிருந்தே உன் அன்னை தந்தை என எதிர்கால நம்பிக்கையாய்
உன்னோடு
உனக்காய்
அத்துனைக்கும் ஈடாய்
இணைந்தது இந்த பந்தம்.. என
இயல்பே இன்பமளித்திடும்
அன்பின் சுவையில் பல சுமைகள் சுகமாக
இன்னல்களும் இன்புற்று ,
சோர்வுகளும் சோர்விழந்து ஓடிட ஊக்கமளித்திடும் அழகும்,
"உன்னோடு என்றும் உயிராய் பிணைந்திடுவேன்" என
அக்கினி முன் பகர்கின்ற சாட்சிகளும்
இப் பந்தம் இருகிட இன்னுமோர் சான்று..