FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on November 13, 2025, 07:22:53 PM

Title: அவளின் நட்பு !
Post by: joker on November 13, 2025, 07:22:53 PM
அவள் கண்ட நாள் முதல்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன புரிதல்கள்
சின்ன சின்ன வார்த்தை பரிமாற்றங்கள்
சின்ன சின்ன சிரிப்புகள் என
வளர்ந்தது நம் நட்பு

காலம் மெல்ல கடந்து போக போக
ஒரு காலத்தில்
நாம் பேசாமல் கூட பேசினோம்.
சிரிப்பின் ஓசை நம் மொழி,
மௌனத்தின் நிழல் நம் ரகசியம்
என தொடர

ஒவ்வொரு
காலை ஒளியையும் பகிர்ந்தோம்,
நம்மைச் சுற்றிய உலகம் சிறியது,
ஆனால்
நம் கனவுகள் முடிவில்லாதவை.

நீ மௌனமாயிருந்தால்
என் இதயம்
துடி துடிக்கும்

நாம் கடந்து வந்த பாதைகளை
நினைக்கையில்
அது என் இதயத்தைக் குளிர்விக்கிறது

காலம் கடந்து,
பணிகளின் நெரிசல்,
சிலர் வந்தார்கள், சிலர் போனார்கள்,
ஆனால் உன் பெயர் மட்டும்
என் மனத்தின் அமைதியான
மூலையில் நிலைத்திருக்கிறது.

நீயும் நானும் இனி பேசமாட்டோம்,
ஆனால் ஒவ்வொரு நாளும்
ஒரு சின்ன நினைவு என் மனதைத் தொட்டால்,
நான் மெதுவாகச் சொல்லுவேன் —
“நன்றி, தோழி… நீ இருந்தது போதுமானது

நீ காகிதத்தில் வரைந்த சிறு மலர்,
இன்றும் என் புத்தகத்தில் மடியாமல் கிடக்கிறது;
அது மலரின் நினைவு அல்ல,
அது உன் இருப்பின் வாசம்.

நாம் பிரிந்தது சண்டையால் அல்ல,
மௌனத்தால்.
அந்த மௌனமே, ஒரு வலி,
அது சொல்லாத வார்த்தைகளின் சுமை.

வாழ்க்கை நம்மை பிரித்தது,
ஆனால்
நினைவுகள் எப்போதும் இணைந்திருக்கின்றன;
நீயோ, நானோ எழுதாத கடிதங்கள்
இன்னும் வானத்தில் பறக்கின்றன

நீ எங்கேயோ சிரிக்கிறாய் என்று தெரிகிறது
அது போதும்;
ஏனெனில் என் உள்ளத்தில் நீயுள்ள வரை,
இந்த நட்பு ஒருபோதும் முடிவடையாது.


***JOKER***
Title: Re: அவளின் நட்பு !
Post by: Vethanisha on November 20, 2025, 06:30:56 AM

நீ எங்கேயோ சிரிக்கிறாய் என்று தெரிகிறது
அது போதும்;
ஏனெனில் என் உள்ளத்தில் நீயுள்ள வரை,
இந்த நட்பு ஒருபோதும் முடிவடையாது.


Azhagiya ulunarvu.. Super poem 👏👏
Title: Re: அவளின் நட்பு !
Post by: SweeTie on November 21, 2025, 12:13:13 AM
நட்புக்கு எங்கே முடிவு?
பேசினாலே சண்டை வருமே!
சண்டைக்கு  தொடக்கம் எங்கே ?
மௌனத்தின் வலிகூட 
இதயத்தை தொடும் நட்பு தானே!

அருமையான கவிதை  JOKER 
Title: Re: அவளின் நட்பு !
Post by: joker on November 21, 2025, 10:05:21 PM
Vethanisha & SweeTie   உங்கள் இருவருக்கும் நன்றிகள்