FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on July 29, 2011, 04:44:13 PM

Title: வழி தேட வந்தவள்.....
Post by: JS on July 29, 2011, 04:44:13 PM
வசந்தங்கள் இல்லை..
வாசலற்று நிற்கிறாள்
வேறு சிந்தனைகள் ஓடவில்லை..!!
வேறு பாதை போகவில்லை !!...

அவனை அவள் விலகவில்லை
அவன் மணமாலை வேறு ஒருவளிடம்
எதிர்காலம் என அவனை நினைத்தாள்!!!...
எண்ணற்ற கனவுகள் கொண்டாள்...

கண்ணனின் வருகை அவள் வாசலை நாடியது
வழிதேட வந்தவள்
வாழ்த்துக் கூறி சென்றாள் மணமக்களுக்கு !!...

விடியலை தேடி புறப்பட்டாள்
வீதி உலா வருகிறாள்...
வீர வசனம் தேவையில்லை
வீண் விளக்கம் அளிக்கவில்லை...

வேஷம் போட்ட மானிடனே!!..
நான் வீழ்வேன் என்று எண்ணாதே...
வாழ்வேன்....வாழ்ந்து காட்டுவேன்
நல்ல எடுத்துக்காட்டாய் !!...!!
Title: Re: வழி தேட வந்தவள்.....
Post by: Yousuf on July 29, 2011, 06:54:29 PM
Quote
வேஷம் போட்ட மானிடனே!!..
நான் வீழ்வேன் என்று எண்ணாதே...
வாழ்வேன்....வாழ்ந்து காட்டுவேன்
நல்ல எடுத்துக்காட்டாய் !!...!!

பெண்களை ஏமாற்றி வேஷம் போடும் மனிதர்களின் முகத்தில் கறியை பூசும் விதத்தில் பெண்கள் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்பதை கவி வடிவில் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் அக்கா...!!!

நல்ல கவிதை...!!!!
Title: Re: வழி தேட வந்தவள்.....
Post by: Global Angel on July 30, 2011, 03:15:11 AM
கண்ணனின் வருகை அவள் வாசலை நாடியது
வழிதேட வந்தவள்
வாழ்த்துக் கூறி சென்றாள் மணமக்களுக்கு !!...

arumayanaa varikal... pala niyankalin pirathipathippu... :( :( :(


jujup curry illai athu
kati kkekekekee