FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 21, 2012, 09:37:34 PM
-
கவிதைகள் எழுத ஏதும் விஷேஷ
வித்தை எதுவும் கற்க்கவில்லை நான் ,
ஏதோ எனக்கு தோன்றும் கருத்தை தான்
எனக்கு தெரிந்த வார்த்தைகளின் வழியே
வெளிபடுத்துகிறேன் !
என் வரிகளில் எதை கண்டோ, எதில் ஈர்க்கபட்டோ ?
என் மனதை கவர்ந்த தமிழை விட, துளி கூட
நெருக்கத்தில் தூரம் இல்லாத மனம் நெருங்கியவர்
என்ன எண்ணி எத்தநித்தாரோ ??
என்னிடம் என் வரிகளில், வார்த்தைகளில்
வர்ணனையில் காதல் கடிதம் ஒன்று
வரைந்து தர முடியுமா என வினவினாள் !
மூச்சரைத்து போய்விட்டேன் !
முடியுமோ? முடியாதோ? முடிவாய்
முடிவு தெரியவில்லை ,இருந்தும்
முயன்று தான் பார்ப்போமே ?
மரியாதைக்குரிய கோரிக்கைகாக .
காதல் அஞ்சல்
வெகு விரைவில் ............
-
அஞ்சலையா!, அல்ல
அஞ்சலியா!
அஞ்சலில் காதல் அஞ்சல் கேட்டவள்....
அவள் யாராயிருந்தாலும்
அஞ்சலி(காணிக்கை)யாய்
அஞ்சல் வரும் நாளை எதிர்பார்ப்போம்
-
அஞ்சலையா?? அல்ல ,அல்ல
அஞ்சலியா??அல்லவே அல்ல
அப்புறம் ??
அஞ்சலில் காதல் அஞ்சல் கேட்டவள்??....
என் ஏஞ்சல் (தேவதை) மச்சான் அவ .....
தேவதைக்கு
புஷ்பாஞ்சலி.........
பொன்னாஞ்சலி.........
கீதாஞ்சலி.........
கவிதாஞ்சலி.........! என வகை வகையாய்
அஞ்சலி(காணிக்கை)யாய்
அஞ்சலி செய்ய ஆசைக்கு
ஆசை தான் , இருந்தும்
நான் வைரமோ, முத்துவோ இல்லையே !
வெறும் செப்பு ...
அஞ்சல் வரும் நாளை எதிர்பார்க்கும்
அன்பு நெஞ்சங்களுக்காக
என் வரிகளில் அஞ்சல் வேண்டிய
என் அன்பு அஞ்சுகத்திர்காக
எழுதிய அஞ்சலின், ஒரு பகுதியை
அஞ்சி அஞ்சி செப்புகிறேன் ......
வெகு விரைவில் .........
-
தேவதைக்கு
புஷ்பாஞ்சலி.........
பொன்னாஞ்சலி.........
கீதாஞ்சலி.........
கவிதாஞ்சலி.........! என வகை வகையாய்
அஞ்சலி(காணிக்கை)யாய்
அஞ்சலி செய்ய ஆசைக்கு
ஆசை தான் ,
உங்கள் தேவதைக்கு இத்தனை வகை வகையான அஞ்சலிகளை விட சிறந்தது....மிகுந்தது...அஞ்சலில் நீங்கள் வரைந்த காதல் அஞ்சலாகத்தான் இருக்கமுடியும்..
எதிர்பார்ப்புடன் நாங்களும் ...
-
vagai vagaiyaai
anjali seiyum nanbarey
anjalikkum anjalaikkum
annan aagiyathal pirarukku
maithunan aanavan
unaku maithunan aanathal
un anjel(thevathai) ku anna naagi ponen....